இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, நவம்பர் 06, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.....4 !

                   லாரன்ஸ் என்றொரு நடனக் கலைஞர் சினிமாவில் எப்படியாவது நுழைந்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று மிகவும் ஆவலாக இருந்தார்.அவ்வப்போது சினிமாவிலும் நடனக் குழுவில் தோன்றியும்,ஒருசில படங்களில்  நடனமாடியும் வந்தார்.
              அவரின் சிறு வயதில்  மிகவும் உடம்பு  முடியாமல்  போய்விட்டது. மூளையில் கட்டி இருப்பதாக டாக்டர்கள் கூற  அவரது தாய்க்கு  இனி அவரது  வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலை  உண்டானது.
                                அப்போது அவரது தாய்க்கு   மகான் ஸ்ரீ ராகவேந்திரர் பற்றியும் அவரின் கருணை உள்ளம் பற்றியும்   தெரிய வந்தது.அன்று முதல்  தினமும் ஆழ்ந்த பக்தியுடன் அவரை வணங்கி, லாரன்ஸ்  குணமாக    பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். 
                             
                                       என்ன ஆச்சர்யம்!டாக்டர்களே வியக்கும் வண்ணம் அவர் விரைவிலேயே குணம் ஆனதுடன் நடக்கவும் ஆரம்பித்தார் ! பிறகு  நடனத்தில் தன் கவனத்தை செலுத்தி அற்புதமாக நடனம் ஆடவும் ஆரம்பித்தார். ஒரு நாள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கண்களில்  அவர் மாட்ட ,அவர் லாரன்ஸ் நடனத்தைப் பார்த்து வியந்து சினிமாவில் பரிந்துரைத்தார்.

                         மிகவிரைவிலேயே  சினிமாத்துறையில்  சிறந்த நடன அமைப்பாளராக தன் முத்திரையை பதித்து,தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். நடனத்தில் மட்டுமல்ல இன்று அவர் ஒரு வெற்றிகரமான நடிகராகவும்,கதை  ஆசிரியராகவும், வெற்றிப்பட இயக்குனராகவும் தமிழ் படவுலகம் மட்டுமல்லாமல் தெலுங்குப் படவுலகிலும் கொடிகட்டிப் பறக்கிறார்.!

                ஸ்ரீ ராகவேந்திரர் அவரை நடக்கவும் நடனமாடவும் வைத்ததுடன் தனது பக்தன் ரஜினி மூலமாகவே அவருக்கு சினிமா உலகிலும் ஏற்றம் தந்ததை என்னவென்று சொல்ல?
        
                                ஸ்ரீ  ராகவேந்திரர் அருள் பெற்ற அவர் தனது பெயரை ராகவேந்திரா லாரன்ஸ் என்று மாற்றிக் கொண்டதையும் ,ஸ்ரீ ராகவேந்திரருக்கு சென்னையில்  தனது பெரும் முயற்சியிலேயே ஒரு கோவிலையும் கட்டி இருக்கிறார் என்பதனையும் உங்களுக்கு கூறவும் வேண்டுமோ? ! !
  

அருள் பார்வை தொடரும்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக