இந்த வலைப்பதிவில் தேடு

சனி, மே 26, 2012

பெண்கள்...!

 பெண்களைப் பற்றி தருமருக்கு பீஷ்மர் 

கூறுவதாக அமைந்தவைகளைப் பார்ப்போமா?  (பெண்களின் குணங்கள்) 

யுத்தம் முடிந்ததும் பீஷ்மர் தர்மருக்கு, யுத்த தர்மங்களைப் பற்றி ராஜநீதிகளைப் பற்றியும் இன்னும் சில தர்மங்களையெல்லாம் விளக்குகிறார். அப்போது தர்மர் "பெண்கள் எப்படிப்பட்டவர்கள்" என்ற கேள்வி எழுப்புகிறார். அதற்கு பீஷ்மர், பஞ்சசுவடி என்ற தேவகன்னிகை குறிப்பிட்டுள்ளதை அப்படியே கூறுகிறார். 'பெண்கள் சுயநலம், ஆசை, அஹங்காரம், ஆத்திரம், ஆசை, அசூயை, திருப்தியின்மை (இன்னும் என்னவெல்லாம் உண்டொ அவ்வளவும் போல?!) ஆகிய குண்ங்களைப் அதிகம் கொண்டிருப்பர். இப்படிப்பட்ட பெண்கள் அதிகரிக்க, யமனுக்கு மனித உயிர்களை கொண்டு செல்லும் போது திருப்தியின்மையே ஏற்படும்' என்கிறாள் என பீஷ்மர் கூறுகிறார்.

படைப்பின் ஆரம்ப காலகட்டத்தில் பெண்கள் மிகுந்த அறிவும், நற்குணமும், வேத அறிவும் மிக்கவர்களாக (வேதம் = knowledge about righteousness) இருந்தனர். மனித உலகம், பூவுலகம் தேவலோகம் போல் ஆகிவிட்டபடியால், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசமின்றி மகிழ்ச்சியும், குதூகலமும் நிரம்பப்பெற்றிருந்தனர். பூவுலகிற்கும் தேவலோகத்திற்கும் வித்யாசம் இன்றி போய்விடும் என்று இந்திரன் (தேவேந்திரன்) கேட்டுக்கொண்டதன் பேரில், பெண்கள் ஆசையும் ஆத்திரமும் சேர்த்து படைக்கப்பட்டனர். அதன் பின் மனிதனின் வாழ்வும் பெரும் அல்லலுக்கு உட்பட்டது. ஆயிரம் நாக்கை கொண்டு ஒருவன் இருந்தாலும், அவனால் தன் ஆயுள் முழுவதும் ஒரு பெண்ணின் தீய குணங்களையும், அதனால் விளையும் விளைவுகளையும் அடுக்க நினைத்தால் முடியாது என்று பஞ்சசுவடி குறிப்பிடுகிறாள்.

மனுதர்மத்தில் (இதுவே தேவலை) பெண்கள் இரட்டை குணங்கள் மிகுந்தவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். அதாவது இயற்கையிலேயே, பெண் என்பவள் பொறுமை-ஆத்திரம், ஆசை-சாந்தம், தாராளம்-சுயநலம் எல்லாமே சரிசமமான அளவு இருக்கபெற்றவள். அதனாலேயே அவளால் சரியானதொரு பாதை தேர்ந்தெடுக்க தேரியாது, அல்லது சரியானதொரு முடிவை எடுக்க முடியாமல் திணறுவதால், ஆண் மகனின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு இருக்கிறாள். இளமையில், தந்தையும், பின் மணாளனும், அதன் பின் மகனும் அவளை பாதுகாக்கின்றனர்.

பெண்கள் பலவீனமானவர்களா? என்ற கேள்விக்கு நம்மில் பலரும், "ஆம்" எனச் சொல்லக்கூடும். உடல்-பலம் மட்டு பட்டவர்கள் என்ற அர்த்தத்தில் அமையும் பதிலது. இன்னும் சிலரோ, பெண்களுக்குப் பொறுமை அதிகம், சோதனைகளை எளிதில் ஜீரணித்து மீண்டு எழும் மனவலிமை அதிகம் படைத்தவர்கள் என்றும் கூறுவர். அதனால் பெண்கள் உடலால் பலவீனமானவர்களாக இருப்பினும் உண்மையில் அதிகம் மனோபலம் உள்ளவர்கள் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இருப்பினும் பீஷ்மர் தர்மருக்கு உபதேசித்த மொழிகளில் பெண்களை எப்படி கையாள்வது என்று பேசும் போது, பெண்கள் பலவீனமானவர்கள் என்று கூறுகிறாராம். எப்படிப்பட்ட பலவீனம்? மனவலிமையில் மட்டுப்பட்டவர்கள். ஆசை அதிகம் அமையப்பெறுவதால் அடக்க ஆள முடியாதவர்கள். நன்றி உணர்வு இயல்பிலேயே அதிகம் இருக்கப்பெறாதவர்கள். எளிதில் உணர்ச்சிக்கு அடிமையாகக் கூடியவர்கள் அதனால் அவர்களை காப்பது அவசியம். அவர்கள் மனதை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். அவர்களை கோபித்தோ அடக்கியோ ஆளாமல் அன்பால் ஆளப்பட வேண்டியவர்கள். (here comes the grand idea of keeping one's spouse happy! and satisfying all her needs n fancies!)

எல்லா பெண்களும் அப்படியல்ல। பொதுப்படையாக முடிவு கட்டிவிட முடியாது. சத்துவ குணம் படைத்த பெண்டிர் இருக்கவும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களால் தான் இப்பூமி செழிப்புறுகிறது. அப்படிப்பட்ட பெண்களால் தான் நீதி நேர்மை, நல்லிணக்க சிந்தனை முதலியவை பாதுகாக்கப்பட்டு, உலகின் ஷாந்தி நிலவுகிறது. அதனால் அப்படிப்பட்ட பெண்கள் பூஜிக்கத்தக்கவர்கள். அப்படிப்பட்ட நற்குண மங்கை ஒருத்தி பூஜிக்கப்பட்டால், அவ்விடத்தில் தேவர்கள் வசிப்பதாக என்று புராணங்கள் கூறுகின்றன. இருப்பினும் பெண்கள் அதிக சதவிகிதம் மேற் சொன்ன வகையில் அடங்கியவர்கள்.

இதை விளக்கும் வகையில் தேவஷர்மா எனும் ரிஷியின் கதையை பீஷ்மர் கூறுகிறார்। தேவஷர்மாவின் மனைவி ருசி மிகவும் அழகானவள். அவள் அழகில் இந்திரன் மயங்கியிருப்பதால், தேவஷர்மா குடிலில் இல்லாத நேரம் பார்த்து இந்திரன் ருசியின் பலவீனத்தை பயன்படுத்தி ஆசையை கிளறி விடக்கூடும் என்று அபிப்ராயப்படுவதால், தம் சிஷ்யனான விபுலனை ருசியை பாதுகாக்கும் படி கூறுகிறார். விபுலன் ருசியின் உடலில் புகுந்து, இந்திரன் வரும் போது, ருசி விரட்டுவதைப் போல் விரட்டிவிடுகிறான். இந்திரனும், விபுலன் ருசியின் உடலில் புகுந்து விட்டதால் இனி தன் ஆசை நிறைவேறாது என்று புரிந்து கொண்டு சென்று விடுகிறானாம். ருசியின் உடலில் புகுந்ததை தேவஷர்மாவிடம் முதலில் விபுலன் மறைக்கிறான். பின் அவர் அதைக் கண்டுணர்ந்து, உன் எண்ணம் நல்லனவாக இருப்பதால், உன்னை நான் மன்னித்தேன், இனி உண்மையை மறைக்கும் பாவத்தை செய்யதே என்று எச்சரிக்கிறார். மேற்சொன்னக் கதையை தர்மருக்கு பீஷ்மர் பகிர்ந்து, பெண்கள் பலவீனங்கள் அதிகம் உள்ளவர்கள் என்பதை எடுத்துரைக்கிறாராம். 

                நன்றி: சோ-வின் எங்கே பிராமணன் part1

 மீண்டும் சந்திப்போம் ......

வெள்ளி, மே 25, 2012

பெண்கள்- அர்த்த சாஸ்த்திரத்தில்..!

பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் அவர்களுக்கான நியதிகள் என்ன
என்பது பற்றி சாணக்யர் சொல்வது என்ன? 




சாணக்கிய முனிவரின் அர்த்த சாஸ்திரம்  அவ்வப்போது சமூக ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் குற்றவியல் தண்டனை குறித்து தக்க அறிவுரைகளை மௌரிய சாம்ராஜ்யத்திடையே பகிர்ந்து வந்திருக்கிறது.

சந்திரகுப்த மௌரிய ரின் அருகில் நின்று கொண்டிருந்த ஒற்றர் படைத்தலைவர் மன்ன ரிடத்திலும் சாணக்கிய முனிவரிடத்திலும் மிகுந்த கவலை தோய்ந்த முகத்துடன், அன்றைய மகளிரின் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு தகவல்களைக் கூறியபடி, முனிவரின் சாஸ்திர அறிவுரைக்காக நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.


ஒரு பெண் தன் கணவன் நீசனாகிவிட் டாலோ, அயல் நாட்டுக்குப் போய்விட்டாலோ, ராஜ துரோகம் செய்தாலோ, தன் உயிருக்கு அவனால் தீங்கு ஏற்படும் என்றாலோ, பெரும்பாவங்கள் செய்து பாவியானவன் என்றாலோ அவனை விட்டுவிட வேண்டும்.


பெண்களுக்கான வாழ்க்கைப் பாதுகாப்பு மிகவும் முக்கியம். சந்திரகுப்த மௌரியரே! இது விஷயத்தில் தக்க ஆணைகளை அவ்வப் போது நீங்கள் இயற்ற வேண்டும்.


மனைவிக்கு ஜீவனாம்சம் தரும்போது தன் குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆகும் செலவைக் கணக்கெடுத்து அதற்குத் தக்கபடி கொடுக்க வேண்டும். அவள் தன்னுடைய ஸ்ரீதனம் முதலானவற்றை வாங்கிக் கொண்டிருந்தாலும் இதைத் தர வேண்டும்.


அந்தப் பெண் கணவனை விட்டுவிட்டு மாமனார் வீட்டில் இருந்தாலோ சொத்தைப் பிரித்துக் கொண்டு போய்விட்டாலோ அவள் ஜீவனாம்ச வழக்கு தொடுக்கக் கூடாது.


கணவன் வெளிநாடு போயிருந்தால்- சூத்திரன், வைசியன், க்ஷத்திரியன், பிராமணன் முதலானவர்களுடைய மனைவிமார்கள் குழந்தைகள் பெறாதவர்களாக இருந்து மறுமணம் செய்ய நினைத்தால் ஒரு வருட காலம் காத்திருக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றவர்களாக இருந்தால் அதற்கு மேல் காத்திருக்க வேண்டும். வெளிநாடு போவதற்கு முன்பு கணவன் அவர்கள் ஜீவனத்துக்கு ஏற்பாடு செய்து விட்டுச் சென்றிருப் பானேயாகில் இரு மடங்கு காலம் எதிர்நோக்கிக் காத் திருக்க வேண்டும்.


கல்வி கற்பதற்காக வெளிநாடு சென்ற அந்தணனுடைய பிள்ளை பெறாத மனைவி பத்து வருடங்களும், பிள்ளைகள் பெற்ற மனைவி பன்னிரண்டு வருடங்களும் காத்திருக்க வேண்டும்.


இந்த காலகட்டத்திற்குப் பிறகு பெண்கள் கணவனுக்காக எதிர்நோக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வாழ்நாள் முழுவ தும் தனித்து வாழலாம் அல்லது அதற்குப் பிறகு வேறு ஒருவனை மணக்கலாம். கணவனு டைய சகோதரர் அல்லது பங்காளிகளை மணக்க வேண்டும்.


இந்தப் பங்காளிகள் வேண்டாமென்று வேறு யாரையாவது மணந்து கொண்டாலோ விபச்சாரம் செய்தாலோ அந்த மனிதன், அந்தப் பெண், அவர்கள் இணையக் காரணமாக இருந்தவன், அவளை மணந்தவன் இவர்கள் அனைவருமே தண்டனை பெற வேண்டிய குற்றவாளிகள்.''


திருமணமாகி கணவனோடு கூடாத பெண் இன்னொருவனுடன் தொடர்பு வைத்துக் கொண்டால் அவளுக்கு 54 வெள்ளிகள் அபராதம்.


கணவன் வெளிநாடு போயிருக்கும்போது தவறான பாதையில் போகும் பெண்ணை கணவனின் உறவினனோ வேலையாளோ அடக்கி வைக்க வேண்டும். திரும்பி வந்த கணவன் அவர்களை மன்னித்துவிட்டால், அந்தப் பெண்ணையும் ஆணையும் தண்டிக் காமல் விட்டுவிடலாம். கணவன் மன்னிக்கா விட்டால் அந்தப் பெண்ணின் செவிகளையும் மூக்கையும் அறுக்க வேண்டும். அந்த ஆணுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!''

நன்றி :திரு.ஜெகாதா நக்கீரன்.காம் 

மேலும் .....




-














வியாழன், மே 03, 2012

ஆடும் வரை ஆட்டம்....!

உலகில்எத்தனைவகையானமனிதர்கள்!எத்தனை வகையான கேரக்டர்கள்! எல்லோரும் எப்போதும் நிலையாய் இருப்பது போல எவ்வளவு ஆட்டம் ஆடுகிறார்கள்? எத்னையோ  மகான்களும் ஞானிகளும் எவ்வளவோ சொல்லிவிட்டபோதும் அநேகம்  பேருக்கு இன்னும் ஞானம்  பிறக்கவில்லை.!      
நினைத்துப் பார்க்கிறேன்......சென்ற ஜனவரி மாதம் என்னுடன் நன்றாக  பேசியவர்கள் இன்று  இந்த உலகத்தில் இல்லை.இன்னும் நான்கே மாதத்தில் நாம் இந்த உலகத்தில்  இருக்க மாட்டோம் என்று நினைத்திருப் பார்களா?
நானும் கூட கனவிலும் நினைக்க வில்லை,இன்னும் நாலு மாதங்களுக்குப்  பிறகு இவர் நம்முடன் இருக்க மாட்டார் என்று! எண்ணிப் பாருங்கள் கடந்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குள்  நம்மிடமிருந்து பிரிந்து  மேலே சென்றவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?யாராவது இன்னும் ஐந்து  அல்லது பத்து வருடங்களுக்குள் நாம் இறந்து விடுவோம் என்று எண்ணி இருப்பார்களா? 
நிலையில்லாத இந்த பிறப்பில் எத்தனை சூது ,வஞ்சகம்,  பொறாமை...
காலம் தான் எத்தனை வலியது?எல்லாவற்றையும் எப்படி மாற்றுகிறது?கடினமான துயரங்களுக்கு மருந்தும் அதுதான்.தலைகால் புரியாமல் ஆடுபவர்களுக்கு முடிவும் அதுதான்!
காலத்தின் வலிமை பற்றி பீஷ்மர் தர்மருக்கு கூறுவதாக அமைந்த கதையைப்  படித்துப் பாருங்கள்.என்னை ரொம்பவே பாதித்த இந்த மகாபாரதக் கதையை உங்களுக்கும் தருகிறேன்...

காலத்தின் வலிமை பற்றி விரோசன் மகனான பலிக்கும்,இந்திரனுக்கும் நடந்த உரையாடலைக் கேள் என பீஷ்மர் தருமருக்கு சொல்லத் தொடங்கினார்.

இந்திரன், பிரம்ம தேவனிடம்,'தானம் செய்வதில் தளராது இருந்த பலி எங்கே?பலி இருக்கும் இடத்தை அறிய விரும்புகிறேன்.அந்தப் பலி வாயுவாய் எங்கும் உலவினான்.வருணனாக இருந்து மழை பெய்தான்.சூரிய சந்திரனாக இருந்து உலகுக்கு ஒளி நல்கினான்.தீயாக இருந்து உலகைத் தகிக்கச் செய்தான்.தண்ணீராக இருந்து உயிர்களின் தாகத்தைப் போக்கினான்.திக்குகளை விளங்கச் செய்தான்.அவன் எங்கே இருக்கிறான்..சொல்வீராக..'என்றார்.

பிரம்ம தேவர், 'ஒருவர் கேட்கும் போது பொய் கூறக் கூடாது.ஆதலால் உண்மையைச் சொல்கிறேன்.அந்தப் பலி ஒட்டகமாகவோ,பசுவாகவோ,கழுதையாகவோ,குதிரையாகவோ ஒரு பாழடைந்த வீட்டில் இருக்கும் தேடிப் பார்' என்றார்.

இந்திரன் 'பலி உண்மையில் பாழடைந்த வீட்டில் இருந்தால்..அவனை நான் கொல்லலாமா?' என்றார்.

பிரம்ம தேவர்,' இந்திரா..அவனிடன் நியாயத்தைக் கேள்.கொல்லாதே.'என்றார்.

இந்திரன் ஐராவதத்தின் மீது ஏறி எங்கும் பலியைத் தேடினான்.பாழடைந்த வீட்டில் கழுதையாக இருந்த பலியைக் கண்டு,'நீ ஏன் இந்தப் பிறவியை எடுத்தாய்? செல்வம் அனைத்தையும் தொலைத்து விட்டுக் கழுதையாக பிறந்துள்ளாயே, உனக்கு இப்பிறவியில் துன்பம் ஏற்படவில்லையா?உலகெங்கும் சுற்றித் திரிந்து பெருஞ்செல்வத்தைச் சேர்த்தாயே..இப்போது எங்கே அந்தச் செல்வம்? உனது நிலை பரிதாபமாய் உள்ளதே.நீ பலியாக இருந்த போது இன்ப போகங்களை அனுபவித்துப் பொருளை எல்லோர்க்கும் வாரி வழங்கினாய்.உன் எதிரில் தேவமகளிர் நடனம் ஆடினர்.கந்தர்வர்கள் ஏழிசை பாடினர்.நீ, ரத்தினங்கள் பதிக்கப் பட்ட தங்கக் குடையின் கீழ் அமர்ந்திருந்தாய்.யாகத்தின் போது ஆயிரம் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்தாய்.இப்போது என்னவாயிற்று அந்த வைபவம் எல்லாம்' என்று எள்ளி நகையாடினார்.

இந்திரனின் பேச்சைக் கேட்ட பலி.."தேவனே..உனது அறியாமைக்கு வருந்துகிறேன்.பிறர் வருந்துமாறு பேசுவது..உன் தகுதிக்கு இழுக்காகும்.நீ குறித்த குடை மாலை ஆகியவை குகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.நல்ல காலம் வரும்போது அவை மீண்டும் என்னிடம் வரும்.ஆகுவது ஆகும் காலத்துக்கு ஆகும்: போகும் காலத்து அனைத்தும் போகும்.இது காலத்தின் விசித்திரம்.இப்போது உன்னிடம் மிகுந்த பொருள் உள்ளதால் உன்னை நீயே புகழ்ந்து கொள்கிறாய்.இந்தக் காலம் அப்படியே இருக்காது.மாறும்.சாதுக்கள் துன்பம் கண்டு வருந்த மாட்டார்கள்.இன்பத்தில் மூழ்கி திளைக்கவும் மாட்டார்கள்.இரண்டையும் சமமாகக் கருதி மன அமைதியுடன் இருப்பர்.செல்வச் செறுக்கால் இறுமாந்து பேசாதே..நான்கூட ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்.காலம் மாறிவிட்டது.இது மாறிக் கொண்டே இருக்கும்.எல்லாம் அதன் கையில்தான் உள்ளது'என்றான்.

அது கேட்ட இந்திரன் 'இப்போது உன் நிலை உனக்கு வருத்தத்தைத் தருகிறதா? இல்லையா? என்றார்.

பலி சொன்னான் 'உனது செல்வச் செருக்கால் அறிவிழந்து பேசுகிறாய்.சில உண்மைகளைச் சொல்கிறேன் கேள்..பொருள்களின் உண்மைத் தன்மை எனக்குத் தெரியும்.செல்வம் நிலையில்லாதது.யாக்கையும் நிலையில்லாதது.உலகில் எல்லாமே அழியக் கூடியதுதான்.இதை உணர்ந்துக் கொண்டதால் நான் எதற்கும் வருந்தாமல் இருக்கிறேன்.இந்தக் கழுதைப் பிறவியும் நிலையில்லாததுதான்.இப்படி உலக நிலையாமை என்னும் உண்மைகளைத் தெரிந்துக் கொண்ட ஒருவன் இவற்றின் அழிவு குறித்தும் வருந்த மாட்டான்.இது உலக இயல்பு எனற தெளிவு ஏற்பட்டபின் ஏன் நிலையாமை குறித்து வருந்த வேண்டும்? ஆறுகள் எல்லாம் கடலை அடைகின்றன.அது போலப் பிறவிகள் எல்லாம் மரணத்தை அடைகின்றன.இந்த இயற்கை நியதிகள் காலத்தால் ஏற்படுபவை என்ற தெளிவு ஏற்பட்ட பிறகு எதற்காகத் துக்கப்பட வேண்டும்?

ஒருவனை ஒருவன் கொன்றுவிட்டதாகவோ, வென்றுவிட்டதாகவோ எண்ணிப் பெருமிதம் அடைகிறான்.உண்மையில் கொல்லுவதும், வெல்லுவதும் அவன் செயல் அன்று.அவனது கருமத்தின் செயல்.அவன் அதற்குக் கர்த்தா அல்லன்.வேறொருவன் கர்த்தாவாக இருக்கிறான்.அவன்தான் பரமாத்மா.அவன்தான் எல்லாவற்றையும் காலத்திற்கு ஏற்றபடி இயக்குகிறான்.அதன்படி அனைத்தும் இயங்குகின்றன.மாற்றமுடியாத சக்தி வாய்ந்தது காலம்.அறிஞனையும்-முட்டாளையும், பலம் உள்ளவனையும்-பலம் இல்லாதவனையும், நல்லவனையும் -கெட்டவனையும்,வள்ளலையும்-வறியவனையும் வேறுபாடில்லாமல் காலம் தன் வயப்படுத்திக் கொள்கிறது.உலகமே காலத்தின் பிடியில்தான் இருக்கிறது.குழந்தை பிறப்பதும்,வளர்வதும், வாலிபனாகத் திகழ்வதும், வயோதிகனாக மாறுவதும், மரணத்தைத் தழுவுவதும் காலத்தின் விளைவு என்பதை உணர்தல் வேண்டும்.இப்படி யுகம் யுகமாகக் காலம் அனைத்துப் பொருளையும் மாற்றி அழித்து வருகிறது.இதற்குக் கடலைப் போல் கரை இல்லை.ஆகவே காலத்தைக் கடக்க யாராலும் இயலாது.

இப்போது கழுதையாக இருக்கும் நான் மேலும் பல வடிவங்களை எடுக்க முடியும்.ஆனால் காலத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.இந்த உலகமே காலத்தின் ஆதிக்கத்தில் இருக்கின்றது.பஞ்ச பூதங்களின் வேற்றுமையும் காலத்தின் விளைவுதான்.காலத்தைக் காட்டிலும் ஆற்றல் மிக்க பொருள் உலகில் வேறொன்றும் இல்லை.அது கண்ணுக்கு புலனாகாது.ஆயினும் இதனைச் சிலர் ஆண்டு என்றும் மாதம் என்றும் நாள் என்றும் காலை என்றும் மாலை என்றும் நிமிடம் என்றும் விநாடி என்றும் கூறுகின்றனர்.

இந்திரா..இந்த உலகம் எதன் வசம் இருக்கிறதோ அதுதான் காலம் என உணர்வாயாக.நீ ஆற்றல் மிக்கவன் என எண்ணிக் கொண்டிருக்கிறாய்.உன்னைப் போல ஆற்றல் மிக்க பல இந்திரர்கள் கால வெள்ளத்தில் மறைந்தனர்.காலம் உன்னையும் கொண்டு செல்லும்.அந்தக் காலம் எப்போது வரும் என சொல்வதற்கில்லை.இதை உறுதியுடன் நம்புவாயாக.

அதிர்ஷ்ட லட்சுமி இப்போது உன்னிடம் உள்ளாள்.இது போல பல்லாயிரவரை இந்த லட்சுமி அடைந்திருக்கிறாள்.இப்போது உன்னிடம் லட்சுமி இருப்பதாலேயே செருக்கு அடையாதே.காலம் மாறும்.

நான் அசுரர்க்கு அதிபதியாக இருந்தேன்.தேவர்களை நடுங்கச் செய்தேன்.பிரம்ம லோகத்தையும் வெற்றி கொண்டேன்.அத்தகைய நான் இப்போது எப்படியிருக்கிறேன்..பார்..எல்லாருடைய கதியும் இதுதான்' எனவே தேவர்க்கு அரசனே..உண்மை உணர்ந்து அடக்கமாய் இரு" என்றான் பலி

நன்றி 
http://bagavathgeethai.blogspot.in/திருT.V. ராதாகிருஷ்ணன்.

புதன், மே 02, 2012

பெண்கள்...

எனது முந்தய பதிவில் பெண்களைப் பற்றி நமது முன்னோர்கள் கூறிய வற்றை 
 அட்லீஸ்ட் இந்தக் கால பெண்கள் தெரிந்து கொள்ளவாவது வேண்டும் என 
எழுதியிருந்தேன்.

 இதோ முதலாவதாக 
பெண்கள் பற்றி மனு நீதி சொல்வது என்ன?

  பெண்கள் குறித்த மனுவின் கருத்துக்களைக் காண்போம்.
 
”எந்தப் பருவத்தினவளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச் செயலும் இயற்றலாகாது” (10 : 147)

”இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது” (10 : 148).

”இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக” (10 : 154).

”அன்றாட வேள்விகள் ஐந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு” (9 : 14).

”நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும்போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை” (9 : 15).

இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது (9 : 17).

‘படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்’ (9 : 17).
 

 நன்றி ..
/www.revivo.in/