நேற்றைக்கு முதல் நாள் ஸ்ரீரெங்கநாதர் உறையூரில் நாச்சியார் தாயாருடன் சேர்த்தி கண்டருளினார்.இன்று ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் எல்லக்கரை மண்டபம் எழுந்தருளினார்.நான் முன்பே ஒரு பதிவில் எழுதி இருந்த படி ஸ்ரீ ரெங்கநாதர் இந்த பங்குனித் தேர் திருவிழாவில் ஜீயபுரம்,உறையூர் மற்றும் எல்லக் கரை மண்டபம் என வெளி இடங்களுக்கு எழுந்தருளினார்.உறையூர் சென்று சேர்த்தி தரிசித்தேன்.இன்று எல்லக்கரையில் ஸ்ரீ ரெங்கநாதரை தரிசிக்கும் பேறு கிடைத்தது.சிறுவனாய் இருந்த போது வெள்ளித்திருமுத்தம் பெரிய வீட்டின் உபயத்திற்கு சென்று இருக்கிறேன்.அதன் பிறகு என்றைக்கு உபயம் எனத் தகவல்சரியாக எனக்குக் கிடைக்காது.
அதனால்
இந்த முறை நான், என்று வரும் எனக் காத்திருந்து தவறவிடாமல் சென்று தரிசித்தேன்.இந்த பேறு கிடைக்க வைத்த அந்த
அரங்கனின் தாழ் பணிந்து வணங்குகிறேன்.... அடுத்த முறை ஜீயபுரம்
சென்று வரவும் அருள் புரிவார் என நம்புகிறேன்....