இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், டிசம்பர் 20, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை ....10 !

            நான் வேலூர்  வேலைக்கான கடைசி பில்லையும் போட்டு முடிக்கும்  நேரம் நெருங்கியது. சரியாக எனது உயர் அதிகாரி போன் செய்து அடுத்த ப்ராஜெக்ட் பொள்ளாச்சியில் தயாராக  இருப்பதாகவும் அடுத்த வாரம் வந்து சேர்ந்து விடுமாறும் கூறினார். எனக்கு மீண்டும் அதே நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமில்லை. மனதிற்கு என்னவோ போலிருந்தது. 
       அன்று ஒரு வியாழக்கிழமை.ஆற்காட்டிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் இரும்பேடு என்ற கிராமத்திலிருந்து உள்ள்ளே சுமார் 2 கிலோமீட்டர் சென்றால் ஒரு ராகவேந்திரர் கோவில் வரும். அந்தக் கோவிலுக்கு எனது ஆர்க்காட்டு நண்பர் ஹிமாச்சல் உடன் சென்றேன். எனது நண்பரிடம் எனது எண்ணங்களைக்  கூறி எனக்கு வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். 

       அந்த ராகவேந்திரர் சந்நிதியிலேயே ஒரு மணி நேரம் உட்கார்ந்து பிரார்த்தனை செய்தேன்.கோவில் நடை சாற்றப் போவதாக குருக்கள் கூறவும் நானும் எனது நண்பரும் கிளம்பினோம். அங்கிருந்து ஆற்காடு செல்லும் வழியில் திமிரி என்ற ஊரில் வண்டியை நிறுத்திவிட்டு  ஒரு கடையில் டீ சாப்பிடப் போனோம். 

    எனது நண்பரிடம் எனது ஆதங்கத்தை கூறிக் கொண்டே டீ சாப்பிட்டேன். அப்போது எனது போன் ஒலித்தது. எடுத்துப் பேசினேன். சென்னையில் ஒரு நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் எனது பயோ டேட்டா வைப் பார்த்தாதாகவும் அவர்கள் நிறுவனத்திற்கு ஏற்றதாக உள்ளதாகவும் interview  விற்கு வரமுடியுமா என்றும் கேட்டார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எப்போதோ அனுப்பிய application !

      சரி எனக் கூறி என்றைக்கு என்பதனையும் கேட்டுக் கொண்டேன்.என்னோடு எனது நண்பர் ஹிமாச்சல் அவர்களுக்கும் ஆச்சரியம் !இப்போதுதான்  தான் ஸ்ரீ ராகவேந்திரரிடம் வேண்டிவிட்டு வருகிறோம்  இன்னும் டீ கூட சாப்பிடவில்லை ,அதற்குள் இப்படி ஒரு செய்தியா ?என்னால் நம்பவே முடியவில்லை என்றார்.என்னாலும் கூடத்தான் நம்பமுடியவில்லை.! 

                   நான் interview விற்கு சென்னை செல்ல வேண்டிய அந்த நாளும் வந்தது..!

  அற்புதங்கள் தொடரும்....

வெள்ளி, டிசம்பர் 16, 2011

மனம்.....9 !

           நமது மனம் தானே நம்மை எண்ணி எண்ணி ஏங்கச் செய்கிறது? தரையில் படுத்தால் கட்டில் - மெத்தை இல்லையே என்ற ஏக்கம். நடந்து சென்றால் ஒரு டூ வீலர் கூட இல்லையே என்ற ஏக்கம். நம்மை நிம்மதி இன்றி அலையச் செய்கிறது நமது மனம் ! 

           எனது நண்பர் ஒருவர் என்னிடம் "நான்   மிகவும் நேசித்த ஒரு பெண் ,அவளும் என்னை நேசிப்பதாகக் கூறி கடைசியில் என்னை ஏமாற்றி விட்டாள்.இப்போது வேறு ஒரு பையனை மணந்து கொள்ளப் போகிறாளாம். எனக்கு மனசே சரியில்லை. அவளை மறக்க முடிய வில்லை  தற்கொலை செய்து கொள்ளலாம் போல  இருக்கிறது "என்று என்னிடம் கூறி வருத்தப் பட்டார்..  எனக்கும் நன்றாகத் தெரியும்  அவர்கள் இருவரும் சேர்ந்து பழகியது,சுற்றியது  எல்லாம். அவள் ஈசி யாக மறந்துவிடு என்று சொல்லிவிட்டாள்,ஆனால் இவரால்  மறக்க முடியவில்லை.பாவம்.  
       
    அவரிடம்  நான் கேட்டேன்,"  நீங்கள்  அவளை மிகவும் நேசிக்கிறீர்கள்  அல்லவா? "

"ஆமாம் ."  

"அவள் மீது உயிரையே வைத்திருக்கிறீர்கள்  அல்லவா?"

"ஆமாம்"

 " அப்படியானால் அவள் அல்லவா வருந்த வேண்டும்? நீங்கள் ஏன்    தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? உன் போல தன மீது உயிரையே வைத்திருக்கும் ஒருவரை  வேண்டாம் என்றால் அது அவளுக்கு அல்லவா நஷ்டம்? நீங்கள்  ஏன் வருத்தப் படுகிறீர்கள் ?இது போல மனநிலை கொண்ட ஒருத்தியை நீங்கள்  மணந்து  கொண்டாலும் உங்களால்  நல்ல வாழ்க்கையை வாழ முடியாது.அவள் உங்களை  மணந்து கொள்ளாததைப் பற்றி பின்னாளில் நிச்சயம் வருந்துவாள்.நீங்கள் உங்கள்  மனதை மாற்றிக் கொள்ளுங்கள் .கொஞ்சம் கஷ்டம்தான்  என்றாலும் இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும் " என்று கூறி அனுப்பினேன்.
    
   காலத்தின் போக்கில் மனதை மாற்றிக் கொண்ட அவர்,  இன்று வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்.

    மனிதர்கள் பலரும் இது போலத்தான் மற்றவர்களின் நடத்தைகளை  எண்ணி  மனம் வருந்திக் கொண்டிருப்பார்கள்.அல்லது தங்களையும் அதே போன்ற-நேர்மைக்கு மாறான - நடத்தைக்கு மாற்றிக் கொள்வார்கள்!

         நான் மிகவும் மதிக்கும்  நண்பர் ஒருவர் தனக்காக ஒரு கட்டிடம்  எனது மேற்பார்வையில் கட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார்.அவருக்கு கட்டிடத்  துறையில் அவ்வளவாக யாரையும் பழக்கம் இல்லாத தால் என்னிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். நான் அப்போது வேறு ஊரில் வேலை செய்து கொண்டிருந்ததால் சனி மற்றும் ஞாயிறு மட்டுமே என்னால்  வந்து பார்க்க முடியும்.எனவே  எனது  நம்பிக்கைக்கு  உரிய, நேர்மையான   கட்டிடப் பொறியாளர் ஒருவரிடம் அந்தப் பொறுப்பைத் தந்தேன்.அவர் எனது கல்லூரி கால நண்பரும் கூட. அவர் அங்கிருந்தே அந்தக் கட்டுமான பணிகளை பார்த்துக் கொள்ள நான் விடுமுறை நாட்களில் அவருடன் சேர்ந்து ஆலோசனைகளை செய்து அந்தக் கட்டிடத்தை கட்டிமுடித்தோம்.
          
            மிகவும் நல்லமுறையில் அந்தக் கட்டிடம் முடிந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.  

               ஆனால் பிறகு  எனது நண்பர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் போக்கு முற்றிலும் மாறியது! அவர்களும் எனது பொறியாளர்  நண்பரும் சேர்ந்து தான் அந்தக் கட்டிடத்தைக்  கட்டியது போலவும் எனக்கு அதில் எந்த விதமான தொடர்பும் இல்லாதது போலவும் காட்ட ஆரம்பித்தனர். பின்னாளில் என்னைப் பற்றி யாரோ சிலர் அவர்களிடம் தவறாகக் கூற என்னிடம் பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்!

           ஒரு சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் வீட்டில் ஒரு விசேஷம் நடந்தபோது  என்னை அழைக்காமல் மற்ற அனைவரையும் ,-அந்தப் பொறியாளர் நண்பர் உட்பட- அழைத்து விருந்து வைத்தனர். இதைப் பார்த்த எனது பிற நண்பர்கள் "உன்னைக் கூப்பிடவில்லையா ?அவர்களுக்கு நீ அறிமுகம் செய்து வைத்த  அந்தப் பொறியாளர் கூட  வந்திருந்தாரே, உனக்கு அழைப்பு இல்லையா? .உனக்கு அதில் வருத்தமாக இல்லையா? என்று கேட்டனர்.    

       நான் கூறினேன்."நான் எதற்கு வருத்தப் பட வேண்டும்?என்னைப்  பொறுத்த வரையில் நான் அவர்களுக்கு எந்தத் தீங்கினையும் செய்யவில்லை.அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் இன்று வரை நினைக்கிறேன் .இன்றும் அவர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடாத செயலால் அவர்கள் தான் வருத்தப்  பட வேண்டும்.நான் நானாகவே இருக்கிறேன்.அவர்கள்  தான் மாறிவிட்டனர். எனவே கவலைப் பட வேண்டியது அவர்கள் தான்- நான் அல்ல !" என்றேன்.
        
            நிறைய பேர்  இப்படித்தான். அவர் அப்படிச் சொன்னார்.இவர் இப்படிச் சொன்னார் .அவன் மட்டும் அப்படி இருக்கலாமா ?இவன் மட்டும் இப்படிச் செய்யலாமா?நான் மட்டும்  எதற்கு அப்படிச் செய்ய வேண்டும்? எனக்கென்ன தலை எழுத்து?என்று மற்றவர்களின் நடத்தையினைப் பற்றிக் கூறி, நேர்மையிலிருந்து தடம்  மாறி மனசாட்சிப் படி செய்யவேண்டியதைக் கூட செய்யாமால் இருந்து விடுகின்றனர்.

              மற்றவர்களுக்காக நீங்கள் ஏன்  மாற வேண்டும்?உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதன் படி நடந்து கொள்ளுங்கள்.யாருக்காகவும் உங்கள் மனது சொல்லும் நல்லவைகளை செய்யாமால் இருந்து விடாதீர்கள்.

                ரோஜா என்றும் மென்மையாகவே தான் இருக்கிறது.முள் அருகினில்  இருப்பதைப் பார்த்து ரோஜாவும் முள்ளாக மாறி விடுவதில்லை. 

          நீங்களும் நீங்களாகவே இருங்கள். மற்றவர்களைப் பார்த்து நீங்களும்  முள்ளாக மாறவேண்டாம்.!

       மனதை  மாற்றுங்கள் ...... மகிழ்ச்சி பொங்கும்...என்றும் தங்கும்....!    

   இன்னும் அலசுவேன்....!      

திங்கள், டிசம்பர் 12, 2011

மனம்....8 !

                                     நமது வாழ்க்கையில் நடை பெரும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நமது மனம் தானே தீர்மானிக்கிறது.?எப்பொழுதோ நடந்ததை அல்லது யாரோ சொன்னவற்றை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் தீர்மானிக்கப் படுகின்றன. அவை சரியாகவும்   போகலாம்.தவறாகவும் ஆகலாம்! இந்த விளாயாட்டு தான் வேண்டாம் என்கிறது ஜென். 

                                                     ஜென் மேலும் சொல்கிறது.நீங்கள் எதையும் தீர்மானிக்க வேண்டாம் நிகழ்வுகளை அதன் போக்கில் விட்டு விடுங்கள்.நடப்பவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.ஏனெனில் முன்பே தீர்மானிக்கப் பட்டு விட்டவைகளை உங்களால் மாற்ற முடியாது.

                                                     மனதினை லேசாக்கிக் கொள்ளுங்கள்.உங்களால் தீர்மாக்னிக்க முடியாது. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று தீர்மானம் செய்யாதீர்கள். ஆனால் நீங்கள் உங்களுக்கு பிடித்தவைகளுக்கு முன்னுரிமை தர முடியும்.  இது எனக்குப் பிடித்திருக்கிறது. இப்படி நடந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று  . இப்படி நினைக்கும் போது முடிவு எதிராக அமைந்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்.    
                                                     
                                    முன்னுரிமை தராமல் நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள்  என்றால்  முடிவு எதிராக அமையும் போது நீங்கள் மிகுந்த  ஏமாற்றம் அடைவீர்கள். அந்த ஏமாற்றம் உங்களை விரக்தி  அடையச் செய்யும். அதனால் கோபம் வரும்.கோபத்தின் விளைவுகள் விரும்பத்தகாதவையாக இருக்கும்!
                                   
                                    ஜென் துறவிகளைப் பற்றிக் கூறும் போது இப்படிச் சொல்வார்கள். அவர்கள் படுக்கையில் தான் உறங்குகிறார்கள். முட்களின் மீது படுப்பது இல்லை.ஆனால் படுக்கை கிடைக்காத போது அவர்கள் தரையில் படுத்து உறங்கவும் தயங்குவதில்லை.! 

                                                ஓஷோ அமரிக்காவில் இருந்த போது தினமும் விலைஉயர்ந்த  காரான ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் செல்வாராம்.ஆனால் அவர் நாடு கடத்தப் பட்டு இந்தியாவிற்கு வந்தபோது புனேயில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர்  வெளியில் செல்லும் போது நடந்தே  செல்வாராம். இதை கண்ட வெளிநாட்டு நண்பர் ஒருவர் நீங்கள் அமெரிக்காவில் இருந்த போது விலைஉயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில்தான் செல்வீர்கள்.இப்போது நடந்து செல்கிறீர்களே எப்படி உங்களால் முடிகிறது?என்று கேட்டாராம்.அதற்கு ஓஷோ,"அப்போது என்னிடம் கார் இருந்தது அதில் சென்றேன்.இப்போது கார் இல்லை.எனவே நடந்து செல்கிறேன்" என்றாராம்.  
  
                                                            இம்மாதிரியான பக்குவத்தைத் தான் நாம் பெற வேண்டும். இது இப்படி அமைந்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை என ஏற்றுக் கொள்ளும் வகையில் மனதினை இலகுவாக்கிக் கொள்ளுங்கள்.

                                           அப்போது மகிழ்ச்சி பொங்கும்...என்றும் தங்கும்....!

   இன்னும் அலசுவேன்......
                                                         

சனி, டிசம்பர் 10, 2011

மனம்...7 !

           மனம்... எப்போதும் எண்ணி எண்ணி ஏங்குவது அதன் இயல்பு. இங்கிருந்து பார்த்தால் அந்தப் பக்கம் உள்ளது நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது. அங்கிருந்து பார்ப்பவர்களுக்கு இங்கிருப்பது நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது.ஆனால் எதிலுமே நிலையாக இருப்பதில்லை.
     

                     ஆசையில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்து எடுத்து விடுகிறோம்.இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம். ஆனால் அதன் முடிவு தவறாகிப் போனால் கலங்கிப் போய் விடுகிறோம். எல்லாம் நாமாக உண்டாக்கிக் கொண்டது அல்லவா?.கடைசியில் எல்லாம் விதி என்று அதன் தலையில் போட்டு  விடுகிறோம். இந்த விளையாட்டு எல்லாம் வீண்.ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?இதுவா அல்லது அதுவா? முடிவை விதியின் கையிலேயே தந்து விடுங்கள். நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்க வேண்டாம். நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நடக்கட்டும். நல்லதாக இருந்தாலும் சரி.அல்லாததாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்யக் கூடியது எதுவும் இல்லை. 


                இவ்வாறு நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்காத போது நடப்பது தான் விதி. எல்லாம் தானாகவே நடக்கட்டும்.எல்லாம் ஏற்கெனவே எழுதப் பட்ட விதி அதை மாற்ற முடியாது. ஒரு சினிமா அல்லது ஒரு டிராமாவைப்  போல.ஏற்கெனவே கதையை எழுதி முடித்தாகி விட்டது ! எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டு விட்டது.முடிவு இப்படித்தான் என்று அதனை எழுதியவருக்குத்தான் தெரியும்.  கதை இப்படிச் செல்ல வேண்டும் என்று நீங்கள் தீர்மானம் செய்வது வீண். எல்லாம் முன்பே எழுதி  முடிக்கப் பட்டு விட்டது. நாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே.

              நீங்கள் இப்போதுதான் முதன் முதலாக ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். ஆனால் அதற்கான பாதை ஏற்கெனவே போட்டாகிவிட்டது. நீங்கள் அந்தப் பாதையிலேயே செல்லவேண்டியது தான்.அடுத்தடுத்து எந்த ஊர் வரும்?மேடுவருமா,பள்ளம்வருமா? ஆற்றைத் தாண்ட வேண்டுமா? ட்ராபிக் ஜாம் ஆகுமா?எதுவும் தெரியாது.ஆனால் குறிக்கோள் நல்லபடி ஊர் சென்று சேர வேண்டும் என்பது தான். வகுக்கப் பட்ட பாதையை விட்டு வேறு பாதையை தேர்ந்தெடுப்பீர்களா? அப்படித் தேர்ந்தெடுத்தால் அது சரியாகவும் இருக்கலாம்.அல்லது தவறாகியும் போகலாம்.ஆனால் நீங்கள் அந்த ரிஸ்க் ஐ எடுக்க மாட்டீர்கள். ஏற்கெனவே போட்ட பாதை யில் தான் செல்வீர்கள்.

                                     நமது வாழ்க்கையும் அதே போலத்தான்.பிறப்பிலிருந்து இறக்கும் வரைக்கான  ஒவ்வொருவரது பாதையும் போட்டாகி விட்டது. நமது வேலை என்ன? அதில் பயணிப்பது தான்.நடுவில் தடத்தினை மாற்றிக் கொண்டு பிறகு துன்பம் வரும் போது ஏன் விதியின் மீது பழி போட வேண்டும்? இன்பமா வரட்டும்.துன்பமா அதையும் சந்திப்போம்.சண்டையா நடக்கட்டும்.சமாதானமா வந்துவிட்டுப் போகட்டும். நாம் எதையும் தேர்ந்தெடுக்க வேண்டாம். வாழ்க்கையை  அதன்போக்கில் விட்டு விடுவோம். ஒரு நதியைப் போல. நதி எதைப்  பற்றியும் கவலைப் படுவதில்லை. அதன் போக்கில் ஓடுகிறது.பள்ளமாக இருந்தாலும் சரி மேடாக இருந்தாலும் சரி.வளைந்து நெளிந்து சென்றாலும் சரி.அதற்கென  வகுக்கப் பட்ட பாதையிலேயே செல்கிறது.கடைசியில் கடலில் கலந்து விடுகிறது.  

            நாமும் அதைப் போல இருப்போம்.வாழ்கையை அதன் போக்கில் விட்டு விடுவோம். இன்பமென்று எதுவும் இல்லை.துன்பம் என்றும் எதுவும் இல்லை.மனம் என்னும் கோப்பையை காலி செய்து விடுவோம்..மனதை வெறுமையாக விட்டு விடுவோம் . எந்த எண்ணங்களும் வேண்டாம்.

                  மனதை மாற்றுங்கள். மகிழ்ச்சி பொங்கும்...என்றும் தங்கும்.!

 இன்னும் அலசுவேன்.....
                     

புதன், டிசம்பர் 07, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை....9 !

             வேலூர் அருகில் உள்ள குடியாத்தம் பகுதியை சேர்ந்த இரண்டு நண்பர்கள் .தீவிர ராகவேந்திர சுவாமி பக்தர்கள். அவர்கள் அவ்வப்போது மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திரரை வழி பட்டு வருவார்கள்.

             அவர்கள் எப்போதும்  மந்த்ராலயத்தில்  ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கிவிட்டு சன்னதியின் முன்பு அமர்ந்து  தியானம் செய்வது  வழக்கம்.(நானும் கூட  மந்த்ராலயம் செல்லும் போது  ஸ்ரீராகவேந்திரர் முன்பு அமர்ந்து ராகவேந்திரரை நினைத்து தியானம் செய்வது உண்டு.) அவ்வாறு அவர்கள் ஒருமுறை தியானம் முடித்து எழும் போது இருவருக்குள்ளும் ஒரே எண்ணம் தோன்றியது. அதாவது ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமைகளை எல்லோருக்கும் தெரியப் படுத்தும் வண்ணம் ஏதாவது செய்ய வேண்டும்  என்று.இருவரும் ஊரில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்கள்  அவ்வளவு தான்.  
            
                   மந்த்ராலயத்திலிருந்து வந்த அவர்கள் ஸ்ரீராகவேந்திரரின் மகிமைகளை television சீரியலாக எடுத்து வெளியிட வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.   அவர்களே வியக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடந்தன. சீரியல், சினிமா,ஸ்கிரிப்ட்  என முன் பின் அனுபவங்கள் எதுவும் அவர்களுக்கு  இல்லாமலே ஸ்ரீ ராகவேந்திரரின்  மகிமைகளை உலகிற்குத் தெரியப்  படுத்தும்  வண்ணம் ஒரு நல்ல தொலைக்காட்சித் தொடர் உருவானது.

                ஜெயா தொலைகாட்சி யின் ஜெயா பிளஸ் சானலில்  கிட்டத் தட்ட  50 வாரங்களைக் கடந்து அந்த சீரியல் இன்னமும்   வந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை காலை  7.30  மணிக்கு அந்த நிகழ்ச்சியை நீங்களும் காணலாம்.
                        சீரியல், சினிமா, ஸ்கிரிப்ட்,T V ஸ்லாட் என முன் அனுபவம் எதுவும் இல்லாத அவர்களுக்கு இப்படி ஒரு எண்ணத்தை உண்டாக்கி அதை செயல் படுத்துமாறும் செய்தது ஸ்ரீ ராகவேந்திரரின் அருள் அன்றி வேறு என்ன?                             
                                                          ------------xx -----------

               வேலூர்-ஆற்காட்டில்  நான் எனது நிறுவனத்திற்காக  அரசாங்க ஒப்பந்த வேலை ஒன்றினை வெற்றிகரமாக செய்து முடித்ததைப் பற்றி எழுதியிருந்தேன். அந்த வேலையினை எங்களது நிறுவனத்திற்காக செய்து கொடுத்தவர்  எங்கள் நிறுவனத்தின்  sub -contrctor ஒருவர். வழக்கமாக எங்கள் நிறுவனம் எடுக்கும் வேலைகளை அவர் தான் ஆட்களை வைத்து முடித்துத் தருவார்.அவரின் பெயர் குப்தா.! பெங்களூரைச் சேர்ந்த அவர்  பின்னாளில் மீண்டும் எனக்கு உதவப் போகிறார் என்று எனக்கு அப்போது தெரியாது......... ! 

அற்புதங்கள் தொடரும்......
                 

திங்கள், டிசம்பர் 05, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.....8 !

எனது அனுபவங்களைத் தொடரும் முன் கொஞ்சம் பிறர் அனுபவங்கள்....

""எனது கனவில் கடவுள் வருகிறார். சில சமயங்களில் அவர் என்னோடு பேசுகிற மாதிரி இருக்கிறது. இதெல்லாம் சாத்தியமா?'' -இப்படியொரு கேள்வியை ஆன்மிகப் பெரியவர் ஒருவரிடம் ஒரு பக்தர் கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர், ""கடவுள் கனவில் எல்லாம் வரமாட்டார். உங்களோடு பேசுகிறார் என்பது வெறும் மனப்பிரமை. இப்படி எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு திரியாதீர்கள். பிறகு உங்களை மனநோயாளி என்று சொல்லி, ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவார்கள்'' என்று பதிலளித்தார். அவருடைய பதில் எனக்கு வருத்தத்தை அளித்தது. ஏனெனில், வேத- சாஸ்திரங்கள், புராண- இதிகாசங்கள், தர்ம சாஸ்திரம், நீதி சாஸ்திரம் அனைத்தையும் அறிந்தவர் அவர்.

"உங்கள் ஊருக்கு வெளியிலிருக்கும் அரச மரத்தின்கீழ் நான் இருக்கிறேன். என்னை வெளியே எடுத்துக் கோவில் கட்டு' என்று சாதாரண மனிதனின் கனவில் இறைவன் சொல்ல, அப்படியே ஒரு முருகன் சிலையோ, காளி சிலையோ, சிவலிங்கமோ கிடைக்க, அதைப் பிரதிஷ்டை செய்து பல சக்தி வாய்ந்த கோவில்கள் பல ஊர்களில் பல நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டிருக்கும் போது, கடவுள் கனவில் வரமாட்டார் என்று சொல்லுவதில் என்ன நியாயம் இருக்கிறது? இறைவன் திருவருளின்றி எதுவுமே நடப்பதில்லை. இது யுகயுகாந்தர மாய் நடந்து வரும் ஒரு விளையாட்டு.


 
அருண் என்று ஒரு பக்தர். இவர் சென்னையை அடுத்த வேளச்சேரியில் வசிக்கிறார். இவர் மந்திராலயம் ஸ்ரீ ராக வேந்திர சுவாமிகளின் தீவிர பக்தர். நேரமும் விடுமுறையும் கிடைக்கும்போதெல்லாம் மந்திராலயம் சென்றுவிடுவார். தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக இருக்கும் இவரது கனவில் சுவாமிகள் தோன்றி, தனக்கு ஒரு பிருந்தாவனம் கட்டுமாறு பணித்தார். கனவிலிருந்து விழித்த அருண் திடுக்கிட்டார். சுவாமிகளே நேரில் வந்து சொன்னது மாதிரி இருந்தது அந்தக் கனவு. கனவை நம்பாமலும் இருக்க முடியவில்லை. மிக மிக எளியோனா கிய என்னால் அந்த மகானுக்கு கோவில் கட்ட முடியுமா என்று திகைத்தார். தன் வீட்டி லுள்ளவர்களிடமும் நண்பர்களி டமும் கனவைப் பற்றிச் சொன்னார். பின்னர் அவரே ஒரு முடிவெடுத்தார்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேனுபுரீஸ்வரர் என்கிற சிவாலயமும், அதையொட்டி சித்தர்கள் கோவிலும் இருக்கும் ஊர் சித்தர்பாக்கம். இப்போது அதை சித்தாலப்பாக்கம் என்றழைக்கிறார்கள். வேளச்சேரியிலிருந்து மேடவாக் கம் சென்று, அங்கிருந்து மாம்பாக்கம் சாலை வழியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றால் பழம் பெரும் கிராமமான சித்தர்பாக்கம் எனும் சித்தாலப்பாக்கத்தை அடையலாம். அந்த சித்தாலப்பாக்கத்தில் சிறிதளவு நிலம் வாங்கி, தன் நண்பர்களுடனும் பக்தர்களுடனும் கோவில் பணிகளைத் தொடங்கி விட்டார் அருண். அவரே எதிர்பாராத விதமாகப் பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் நிதி கொடுக்க, பிருந்தாவன வேலைகள் அனைவரும் வியக்கும்படி விரைவாக நடைபெற ஆரம்பித்தது.

மந்திராலயத்திலுள்ள மூல பிருந்தாவனத்திலிருந்து மிருத்திகை (மண்) எடுத்து வந்து, அதற்கு 48 நாட்கள் சிறப்புப் பூஜை செய்து, 24-1-2007 அன்று சித்தாலப் பாக்கத்தில் பிருந்தாவனப் பிரதிஷ்டை வெகு விமரிசையாக நடந்தேறியது. அப்போது கோவில் கோபுர கலசத்தை கருடன் ஒன்று மூன்று முறை வட்டமிட்டுப் பறந்ததை அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மெய்சிலிர்த்தனர். "ஓம் நமோ நாராயணா, ஓம் ஸ்ரீ ராகவேந்திரா' என்று விண்ணதிர முழங்கினர். எல்லா நலன்களையும் ஸ்ரீ ராகவேந்திரர் அனைவருக்கும் காமதேனுவாக இருந்து வழங்குவார் என்பதற்காக இதனை "நல பிருந்தாவனம்' என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

பிருந்தாவனத்தையொட்டி ஸ்ரீ ராகவேந்திரர் ஏழடி உயரத்தில் பவ்ய ஸ்வரூபமாகக் காட்சியளிக்கிறார். சிரசில் பிரஹலாதராக இருந்து வணங்கிய ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும், மார்பில் ஸ்ரீ ராமரையும் தாங்கி கண்கொள்ளா அழகுடன் காட்சியளிக்கிறார் மகான் ராகவேந்திரர். உடுப்பி பாலிமார் மட சுவாமிகள்

ஸ்ரீ விஞ்ஞானிதி தீர்த்தர் இந்தக் கோவிலுக்கு விஜயம் செய்து பூஜைகளை நடத்தி, சித்தாலப்பாக்கத்தை விட்டுப் பிரியவே மனமில்லை என்று வர்ணித்திருக் கிறார். திருவுருவச் சிலையை 48 நாட்கள் ஜலதான்ய வாசம் செய்கையில், ஆறாவது நாளிலிருந்து ஒரு சர்ப்பம் சிலையின்மீது இரவு முழுவதும் இருந்து, பொழுது புலர்ந்ததும் சென்று விடுவது வழக்கமாக இருந்தது என்றும்; 48-ஆவது நாளன்று காணாமல் போன ஆஞ்சனேயர் சிலையைத் தன் உடலில் சுற்றிக் கொண்டு மேலே வந்து அந்த சர்ப்பமே கொடுத்தது என்றும் சொல்லப்படுகிறது.

மந்திராலயத்தில் உள்ளதுபோல் மாஞ்சாலி அம்மனுக்கும் சிலை வைத்து பூஜை நடைபெறுகிறது. ஸ்ரீ ராகவேந்திரர் சில ஆண்டுகள் மதுரையில் இருந்து கல்வி கற்றார். பின்னர் கும்பகோணம் புறப்படும்போது மதுரை மீனாட் சியை விட்டுப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். அப்போது மீனாட்சியம்மனே அவரிடம், "நீ இருக்கும் இடத்திலெல்லாம் நான் இருப்பேன்' என்று சொன்னதால், மாஞ்சாலியம்மனே மீனாட்சி என்று ஓர் ஐதீகமும் உண்டு. அதனால் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கு மடமோ, கோவிலோ அமைக்கும்போது எல்லா ஊர்களிலும்

ஸ்ரீ மீனாட்சியம்மனின் சொரூபமாக மாஞ்சாலியம்மனையும் பிரதிஷ்டை செய்வது வழக்கம். அது சித்தாலப்பாக்கத்தி லும் நடைபெற்றுள்ளது.

2007-ஆம் ஆண்டுவரை வெறும் பொட்டல் காடாகக் காட்சியளித்த சித்தா லப்பாக்கத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் அமைந்த பிறகு எங்கெங்கு காணினும் சிறிய, பெரிய குடியிருப்புகள், அடுக்கு மாடி வீடுகள்! இரண்டு மூன்று வருடங்களில் ஸ்ரீ சுவாமிகள் தன்னருகே அனைவரையும் அழைத்துக் கொண்டு விட்டார் போலும்!

2007-ஆம் ஆண்டு கும்பாபிஷேகத் திற்கும், பிருந்தாவனப் பிரதிஷ்டைக்கும் நாள் குறித்துவிட்ட நிலையில், நிதி நெருக் கடி ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் மீண்டும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஆதம்பாக்கத்தில் மாதவாச்சார் என்னும் அன்பர் மந்திராலய உண்டியில் போடுவதற்காக பத்தாயிரம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தார். ஆனால் உடனடியாக அவரால் மந்திராலயம் செல்ல முடியவில்லை. ஸ்ரீ ராகவேந்திரர் அவர் கனவில் தோன்றி, "நீ மந்திராலயம் வரவேண்டாம். இங்கேயே சித்தாலப்பாக்கத்திற்கு நான் வந்திருக்கிறேன். அதனால் பத்தாயிரம் ரூபாயை அந்தக் கோவிலுக்கு நீ நன்கொடையாக வழங்கு' என்று சொல்ல, மகிழ்ந்து போன மாதவாச்சார் சித்தாலப்பாக்கம் எங்கிருக்கிறது என்று தேடி வந்து, பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாராம்.

ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் சித்தாலப் பாக்கம் வந்து தியானம் செய்வதுண்டு. ஒரு நாள் அவர் தியானம் செய்து கொண்டிருக்கும்போது, அருகிலிருந்த ஏரியில் ஸ்ரீ சுவாமிகள் ஸ்நானம் செய்துவிட்டு பிருந்தாவனத்துள் நுழைந்ததைப் பார்த்து அதிசயப்பட்டாராம். அனைவரிடமும் ஸ்ரீ ராயரின் அருள் தனக்குக் கிடைத்துவிட்ட தாகச் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.

அதேபோல சென்னை துறைமுகப் பொறுப் புக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ரமணன் என்பவர் சிறந்த ராகவேந்திர பக்தர். பல ஆண்டுகளாக வியாழக் கிழமைகளில் உணவு ஏதும் அருந்தாமல் ஸ்ரீ ராகவேந்திரரே கதி என்று கிடப்பவர். தாம்பரத்தில் வசிக்கும் இவர் ஒவ்வொரு வியாழனன்றும் திருவல்லிக் கேணி, மாம்பலம் என்று ஏதாவது ஓரிடத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ ராயரை நேரில் சென்று தரிசிப்பது வழக்கம். திடீரென்று அவருக்கு இதய நோய் வந்து அவதிப்பட்டார். அந்த வார வியாழக் கிழமையில் தான் வசிக்கும் தாம்பரத்திற்கு அருகில் ஏதும் கோவிலோ மடமோ இல்லையே என்று வருந்தினார். புதனன்று இரவில் ஸ்ரீ ராயர் அவர் கனவில் தோன்றி, சித்தாலப்பாக்கத்தில் தன்னைக் காண வருமாறு அழைத்தாராம். அப்படிப்பட்ட மகான்தான் ஸ்ரீ ராகவேந்திரர்.

2007-ஆம் ஆண்டு கட்டப்பட்ட சித்தாலப் பாக்கம் ஸ்ரீ ராகவேந்திரர்  கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய ஆராதனை வெகு சிறப்பாக நடைபெறுவதோடு, ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானமும் தன் நண்பர்களின் துணையோடு செய்து வருகிறார் அருண். அதுவும் ஐந்து நாட்கள். அந்த ஐந்து நாட்களிலும் இசைக் கச்சேரிகள், சொற்பொழிவுகள் என்று கோலாகலம். 2008-ஆம் ஆண்டு

ஸ்ரீ ராகவேந்திர சரித்திரமும், 2009-ஆம் ஆண்டு சுந்தர காண்டமும் சொல்லும் வாய்ப்பினையும் புண்ணியத்தையும் எனக்களித்தார் அருண்.

பக்தர்கள் இவ்வாலயம் சென்று ராகவேந்தி ரரின் அருளைப் பெற்றிடுங்கள்.


                                                                                             --  பா.சி. ராமச்சந்திரன்


Name : Santha Kumari Sitharthan Date & Time : 1/5/2011 1:30:34 PM
-----------------------------------------------------------------------------------------------------
நீங்கள் அனுப்பிய இந்த செய்தி மிகவும் அருமை மெய் சிலிர்த்தது ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு ஜெய். ப்ளீஸ் சிதலபக்கம் முகவரி & லன்மார்க் கூறவும். நங்கள் 1 முறையாவது சுவாமி தரிசனம் பெற வேண்டும் .எங்களது குறைகளை அவரிடம் கூறி ஆசி பெற வேண்டும்.மிக்க நன்றி .
-----------------------------------------------------------------------------------------------------
Name : gururajan, chengalpet Date & Time : 9/6/2010 9:47:18 AM
-----------------------------------------------------------------------------------------------------
vanakam
-----------------------------------------------------------------------------------------------------
Name : நாகராஜன் பாப்பாரப்பட்டி Date & Time : 8/4/2010 5:23:23 PM
-----------------------------------------------------------------------------------------------------
வணக்கம் அடியேன் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சார்ந்தவன்.1935ம் ஆண்டு ராயரின் ப்ருந்தாவன ப்ரதிஷ்டை இவ்வூரில் நடைபெற்றது.அப்போதைய மிட்டாதார் திரு அச்சுத அய்யரின் தம்பி கிருஸ்ணமூர்த்தி ராவ் அவர்கள் தனக்கு ஆண் வாரிசு வேண்டி மந்திராலயத்தில் சேவை புரிந்தபோது "உங்கள் ஊருக்கு நானே வருகிறேன் என்று கனவில் சொன்னதாக உண்மை வரலாறு உள்ளது. மகானின் அருளால் ஆண் குழந்தை பிறந்து கே.குருராவ் என்ற பெயரில் இன்றும் அவர் இங்கு வாழ்ந்து வருகிறார் ராயரின் அருள் பெற்றிட அனைவரையும் பாப்பாரப்பட்டிக்கு வரவேற்கிறேன்
-----------------------------------------------------------------------------------------------------
Name : k.k.gopalswamy Date & Time : 7/25/2010 10:44:24 AM
-----------------------------------------------------------------------------------------------------
என் கனவில் வியாசர் வந்து நல் ஆசி அருளினார், அன்றிலிருந்து நான் வியாசர் பக்தன் ஆகி நாளை (ஜூலை இருபத்தைந்து ) அவருடைய ஜெயந்தி -ஐ ஒரு ஆஸ்ரமத்தில் கொண்டாடபோகிறேன். நான் அவருக்காக ஒரு தியானமண்டபம் கட்டுவதற்கு முழு முயற்சி எடுத்துள்ளேன்.இதைப் பற்றி வுங்கள் மேலான ஆலோசனை தேவை, நன்றி
-----------------------------------------------------------------------------------------------------
Name : Saravanaraju Date & Time : 7/19/2010 1:58:19 PM
-----------------------------------------------------------------------------------------------------
உண்மை, கடவுள் என் கனவில் வந்திருக்கிறார். என் இரண்டவது பையன் பிறந்தது தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி முதுமாலயம்மன் என் கனவில் வந்து உனக்கு இரண்டவது பையன் என்று சொன்னது. சொன்னபடியே எனக்கு இரண்டவது பையன்தான்.
-----------------------------------------------------------------------------------------------------
 ஆதாரம்  : www . nakkheeran .in  01 .07 .10 

 அற்புதங்கள்    தொடரும்.....

வெள்ளி, டிசம்பர் 02, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை....7 !

  நான் ராகவேந்திரரை நினைத்து வேண்டிக்கொண்டே வந்தேன். இறங்கியதுமே ஸ்ரீ ராகவேந்திரரைக் கண்டதும் பரவசம் ஆனேன். அந்தக் கடையிலேயே டீ சாப்பிட்டுவிட்டு அந்த அரசாங்க அலுவலகத்திற்கு வழிகேட்டேன். வலதுபுறம் திரும்பினால் முதல் வீடு தான் அந்த அலுவலகம் என்று கூறினார்கள். தேட வேண்டிய வேலை இல்லாமல் சுலபமாக முடிந்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அந்த அலுவலகம் சென்று நான் வந்த காரணத்தைக் கூறினேன். எங்கள் நிறுவனத்தின் ஒப்பந்த  வேலைக்கான பணிகளை செய்யும் பிரிவு மேல் மாடியில் இருப்பதாகக் கூறினார்கள். நான் மேலே சென்று அந்த  வேலைக்கான பொறுப்பு வகிக்கும் பொறியாளரின் அறையின் முன் சென்று நின்றேன்.  அந்த அறையின் முன் வைக்கப்  பட்டிருந்த பெயர்ப் பலகையில்  அந்தப் பொறியாளரின் பெயர் எழுதப் பட்டிருந்தது...

 அவரின் பெயர்....ராகவன்.!..அப்போதே எனக்கு விளங்கிவிட்டது.இந்த ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடியும் என்பது. அதே போல அந்தப் பொறியாளர் எனக்கு சக துணை இல்லாத குறையைப் போக்கி கடைசி வரையில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து அந்த ப்ராஜெக்ட் ஐ  குறித்த  காலத்தில் முடிக்க மிகவும் உதவினார் .    

நான் வேலை செய்த அந்த நிறுவனம் குறித்த காலத்தில் வேலையை திறம்பட முடித்து நிலுவையில் ஒரு ருபாய் கூட இல்லாமல் முழு ஒப்பந்தத் தொகையையும் பெற்ற மிகச்சில வேலைகளுள் அதுவும் ஒன்றாக அமைந்தது!

இவ்வாறாக நான் ஒரே ஆளாக தனியாக நின்று அந்த ப்ராஜெக்ட் ஐ வெற்றிகரமாக முடித்தாலும் எனக்கு எனது தலைமை எந்தவிதமான பதவி உயர்வோ அல்லது சம்பள உயர்வோ தரவில்லை! அந்த நிறுவனத்தின் தலைமை காரியாலயம் மும்பையில் இருந்தாலும் இங்கே தலைமை ஏற்பவர் தான் இங்குள்ள சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை எடுப்பார். எனவே எனது பதவி உயர்வும் சம்பள உயர்வும் அவர்கைகளில் இருந்தும் ஏனோ எனக்கு எதுவும் அவர் செய்யவில்லை. ஆனால் எனக்கு பொள்ளாச்சியில் வேறு ப்ராஜெக்ட் தயாராக இருப்பதாகவும் ,கடைசி பில் ஐ முடித்து விட்டு அங்கு செல்ல  தயாராகும் படியும் எனக்கு தகவல் தரப் பட்டது.

இன்னும் வரும்....