இந்த வலைப்பதிவில் தேடு

சனி, ஏப்ரல் 28, 2012

( ஒரு சில !) பெண்கள்..!

அந்தக்கால பட்டினத்தார் முதல் இந்தக் காலத்தில் சோ வரை பெண்களை  கொஞ்சம் ஜாக்கிரதையாகவே கையாள வேண்டும் என்றும், அவர்கள் நம்பிக்கைக்கு அப்பார்ப் பட்டவர்கள் என்றும் கூறியிருப்பதை பார்த்திருக்கிறேன். கொலையும் செய்வாள் பத்தினி என்று சொல்லியிருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஒரு பெண் துணிந்து விட்டால் என்னவேண்டுமானாலும் செய்வாள் என்பதையும் பார்த்திருக்கிறேன். எனக்கு தெரிந்து ஒரு பெண்ணும் அவளது குடும்பத்தில் உள்ள பெண்களும் சேர்ந்து ஒரு ஆணை படாத பாடு படுத்தியதைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறேன்.

அந்த ஆண்மகன் செய்த ஒரே பாவம் அவர்கள் வீட்டில் மாப்பிள்ளையாய் ஆனது தான். அவனை எப்படியாவது தங்களின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக ( எல்லாம் அவன் சம்பாதிக்கும் பணம் முழுவதும் தங்கள் வீட்டுப் பக்கம் தந்து விட வேண்டும் என்பதற்காகவும் ஊதாரித்தனமாக அவர்கள் செய்துவிட்ட செலவுகளால் ஏற்ப்பட்ட கடன்களை அடைக்க வேண்டும் என்பதற்காகவும் தான் ) அவன் மீது இல்லாத பழிகளை எல்லாம் கூறி (இருக்கவே இருக்கிறது 498 A என்னும் பெண்களுக்கு ஆதரவான சட்டம்!) கோர்டிர்க்கும் போலீஸ் ஸ்டேஷ னுககுமாக அவர்களுக்கு உடன்படாத அவனை அலையவிட்டு  வறுத்து எடுத்து விட்டார்கள். பாவம் அவன் இப்போது ஏன்டா திருமணம் செய்தோம் என்று நொந்து போய் இருக்கிறான்.

 காரணம் அந்தப் பெண்கள் வீட்டில் அவர்களை அடக்கி ஆள சரியான ஆண் மகன் இல்லாதது தான்.

ஒருகாலத்தில் பரத்தையர் வீட்டிற்கே கணவனை கூடையில் சுமந்து சென்ற பெண்ணையும்,  ,கணவனின் சின்ன வீட்டிற்காக தனது நகைகளை எல்லாம்  தந்த கண்ணகி போன்ற பெண்களும்,எமனிடம் போராடி கணவனின் உயிரை மீட்டிய பெண்ணும்  வாழ்ந்த நாடு தான் இது இன்று இப்படி ஆகிவிட்டது! 

இன்று "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்" என்று ஒரு வெப் சைட் டினையே  வைத்துக்குக் கொள்ளும் அளவிற்கு பெண்களால் பாதிக்கப் பட்டவர்கள் அநேகம் பேர். ( உண்மையிலேயே பெண்களை வரதட்சினை கேட்டும் பிறவழியிலும் துன்புறுத்தும் ஆண்கள் இதில் சேர்த்தி இல்லை.)

ஆனால் இன்றும் கூட கணவனையே தெய்வமாக எண்ணி வாழும் பெண்களையும் பார்க்கின்றேன். 

பெண்களுக்கு ஆதரவான சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு பெண்ணீயம் பேசி ஆட்டம் போடும் பெண்களைப் பற்றியது தான் இந்தப் பதிவு. 

அந்தக் கால அர்த்த சாஸ்திரமும் ,மனு நீதியும் ,காம சாஸ்திரமும்,விதுர நீதியிலும் ஒரு நல்ல பெண் ,நல்ல மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கூறியிருப்பதை  இந்தக்காலத்துப் பெண்கள் அட்லீஸ்ட் படித்து தெரிந்து கொள்ளவாவது வேண்டும்.

முன்னோர் எல்லாம் மூடர்களல்ல,,,,!நமக்குண்டு பண்பாடு..!

சனி, ஏப்ரல் 21, 2012

கடவுள் நம்பிக்கை.

இவ்வளவு காலமாக நான் எழுதிவரும் விஷயங்களை படிக்கும் எல்லோருக்கும் மனதில் ஒரு கேள்வி எழும்.எப்படி ஸ்ரீ ராகவேந்திரர் இந்த முரளி வேண்டியவுடன் ஏதாவது ஒரு உருவத்தில் அல்லது ஏதோ ஒரு வழியில் வந்து சரியாக உதவுகிறார்?.நானும் தான் கடவுள்களை வேண்டுகிறேன்,ஆனால் எனக்கு எந்தக் கடவுளும் உதவ வில்லையே என்று.

உண்மையில் பார்த்தால் கிட்டத்தட்ட எண்பதுகளில் ஆரம்பித்து இன்றுவரை சுமார் முப்பது ஆண்டுகால இடைவெளியில் நடந்தவைகளை தான் நான் எழுதியிருக்கிறேன்.அப்படியானால் இந்த நீண்ட கால இடைவெளியில் எனக்கும் பல துன்பியல் சம்பவங்கள் நடந்து இருக்கின்றன.  பல துன்பமான காலகட்டங்களில் நான் கடவுளை வேண்டியது போல எனக்கும் பல விஷயங்கள் நடக்காமல் போயிருக்கின்றன.

 இவை ஏன் என்று யோசிக்கும் போது எனக்கு இப்படித் தோன்றுகிறது. சில வகைத்துன்பங்களை நமக்கு கடவுள் இவன் அனுபவித்தே ஆகவேண்டும் என்று ஒரு தண்டனை போலவே தந்துவிடுகிறான்.அவைகளை நாம் அனுபவித்தே ஆக வேண்டி இருக்கிறது.ஏனென்றால் நமது கர்ம வினைகளின் காரணமாகவோ அல்லது இந்தப் பிறவியிலேயே நாம் செய்துவிட்ட பாவச் செயல்களினாலோ நமக்கு இந்த தண்டனைகள் கிடைக்கின்றது. நமது கர்ம வினைகளுக்கான தண்டனையும் இந்த பிறவிக்கான தண்டனைகளையும் நாம் இந்தப் பிறவியிலேயே அனுபவிக்க வேண்டும் என்பதே இறைவனின் சித்தம்.அப்படி அனுபவித்து விட்டால் அடுத்த பிறவியில் நமக்கு முக்தியோ அல்லது  இதைவிட ஒரு நல்ல பிறப்போ நிச்சயம்.

அதனால் தான் கடவுளின் மீது தீவிர பற்று கொண்டவர்கள் ஏதாவது துன்பங்களை அனுபவித்தாலும் அவர்கள் அதிலிருந்து விரைவில் மீண்டு வந்து விடுவார்கள். எப்படி ஒரு குழந்தை நீச்சல்  கற்றுக்கொள்ளும் போது அதன்  தாயோ அல்லது தந்தையோ அந்தக் குழந்தை  எந்த பாதிப்புக்கும் உள்ளாகாமல் நீச்சல் கற்றுக் கொள்ளும் வரை அருகிலேயே இருக்கிறார்களோ அதே போல அந்த இறைவனும் நாம் துன்பங்களை அனுபவிக்கும் காலங்களில் நம் கூடவே இருந்து அதிலிருந்து வெற்றிகரமாக் மீண்டு வர நிச்சயம் உதவுவார்.

இதைத்தான் திரு ரஜினிகாந்த் அவர்கள் பாட்ஷா படத்தில் "நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கை விட மாட்டான்,கெட்டவர்களுக்கு நிறைய தருவான் ஆனா கை விட்டுடுவான்"என்று கூறுவார். 

இதை நன்றாக உணர்ந்து பார்த்தால் அநேகமாக எல்லா ஆஸ்திகர்களும் மனம் நொந்து கேட்கும் " கெட்டவர்கள் எல்லாம் நன்றாக இருகிறார்கள் .நல்லவர்கள் மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் அனுபவிக்கிறார்கள்?" என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

அதாவது நல்லவர்களுக்கு துன்பங்கள் இந்தப் பிறவியிலேயே முடிந்து விடும்.கெட்டவர்களுக்கான தண்டனைகளுக்கு இந்தப் பிறவி போதாததால் அடுத்த பிறப்பில் அவரவர்க்கான பிறவிகளும் அதற்கான தண்டனைகளும் தொடரும்! இதுதான் இறைவனின் நியதி! 

வெள்ளி, ஏப்ரல் 06, 2012

அழகான கொலைகாரி...!

என்னுயிரே...என்னுயிரே....
பெண்ணாக  இங்கு வந்து   ஏன் பிறந்தாய்..?
பெண்ணாகப் பிறந்தாலும் பரவாயில்லை
அழகான ஓவியம் போல் 
அங்கமெல்லாம் ஏன் கொண்டாய்? .
அழகான ஓவியமாய் இருந்தாலும் பரவாயில்லை..
ஆசை கொண்டு அலையும்படி 
என் கண்ணில் ஏன் விழுந்தாய்?
கண்களிலே விழுந்தாலும் பரவாயில்லை..
காதல் என்னும் படுகுழியில் 
ஏன் என்னை விழ வைத்தாய்?
படுகுழியில் விழுந்தாலும் பரவாயில்லை
உயிரோடு உயிராக 
என்னுடன் ஏன் கலந்தாய்?
உயிரோடு உடலோடு உணர்வோடு
கலந்துவிட்டு - எனை 
ஒத்தையிலே வாடவிட்டு 
ஓடிவிட எண்ணுகிறாய்...
என்றாலும் பரவாயில்லை 
எனைக் கொன்று விட்டு நீ சென்றுவிடு..
உன் நினைவால்
 உருகி  உருகி இறப்பதை விட
ஒரே நாளில் உனக்காக 
என் உயிரைத் தருகிறேன்..
நீ எங்கு சென்றாலும் 
வாழ்க வாழ்க என 
என் இதயத்திலிருந்து வாழ்த்துகிறேன்....!