இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், ஆகஸ்ட் 23, 2012

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை 19....ஸ்ரீரங்கம்..! 7

எனக்கு அவர்கள் கொடுத்த பிரஷர் காரணமாக அரை மனதுடன் நான் அந்த வேலையைத் துவங்கினேன்.கிட்டத்தட்ட 125 அடி நீளத்திற்கு  சுவர் எழுப்ப வேண்டும். ரிஸ்க் நிறைந்த வேலை ஆதலால் 15 அடிகளாகப் பிரித்து செய்ய முடிவு செய்தேன்.முதலில் 15 அடிகளுக்கு நிலத்தின் மட்டம் வரை பள்ளம் தோண்டி சுவரையும் எழுப்பிய பின் அதை மூடி விட்டு அடுத்த 15 அடி செல்லலாம் என தீர்மானம் செய்தேன்.பெங்களூரில் மழை எப்போது வரும் என்று கூற முடியாத நிலையால் இவ்வாறு முடிவு செய்தேன்.

ஒரே நாளில் 15 அடிக்கு பள்ளம் எடுத்து அஸ்திவார concrete போட்டு கம்பி வேலைகளையும் முடித்து நிலத்தின் மேல் மட்டம் வரை concrete போடவும்,   அன்றே இரவோடு இரவாக ஏற்ப்பாடு செய்து விட்டேன்.ஆனால் சுமார் 9 மணி அளவில் மழை பிடித்துக் கொண்டது.!பாதி concrete போட்ட நிலையில் வேலை நிறுத்தப் பட்டது. பெரிய மழையாக இருந்ததால் நாங்கள் எல்லோரும் guest house திரும்பி விட்டோம்.

சுமார் 1 மணி அளவில் பக்கத்து பாக்டரி இலிருந்து போன்! அந்த அஸ்திவாரத்தின் மீது பக்கத்து compound wall சரிந்து விழுந்து விட்டது என்று. நான் பயந்த படியே நடந்து விட்டது. என்ன செய்வது அந்த பேய் மழையில்? நாளை காலையில் பார்த்துக்  கொள்ளலாம் என நினைத்து படுக்கச் சென்றேன். ஆனால் எனது client மேலாளர் என்னைத்தூங்க விடவில்லை. உடனே site சென்று ஏதாவது செய்ய வேண்டும் என்று தொந்தரவு செய்தார். நான் மசியவில்லை .என்  பேச்சைக் கேட்காமல் நீங்கள் தானே பிரஷர் தந்தீர்கள்?இந்த மழையில் நான் என்ன செய்ய முடியும்? நான் சென்றாலும்  labours வரவேண்டுமே?இந்த மழையில் நடு இரவில் யார் வருவார்கள்? 
 என்று கூறிவிட்டு, நாம் தான் சுவர் விழுந்தால் எங்கள் நிர்வாகம் பொறுப் 
பேற்காது  என்று மெயில்   அனுப்பச் சொல்லி விட்டோமே.எனவே இது நமது ரிஸ்க் இல்லை என்று   இருந்து விட்டேன்.

மறு நாள் ஞாயிற்றுக் கிழமை. காலை 6 மணிக்கெல்லாம் சைட் சென்று விட்டேன். இடிபாடுகளை அகற்றி கம்பிகளை சரி செய்ய ஆட்களை ஏற்பாடு செய்தேன். 8 மணி வாக்கில் எங்களது client மேலாளர் வந்து விட அவருக்கும் எனக்கும் வாக்கு வாதம் முற்றியது.எங்களது site in-charge  ஞாயிறு ஆதலால் ஊருக்குச் சென்று விட்டார்..அவருக்கு விஷயத்தைக் கூறிய போது  நீயே சமாளித்துக் கொள் என்று கூறி விட்டார்.

நான் கூறியதை கேட்காமல் எனக்கு பிரஷர் தந்து செய்ய வைத்ததாலும் நாங்கள்  ரிஸ்க் பொறுப்பு ஏற்க மாட்டோம் என மெயில் தந்திருப்பார்கள் என்ற தைரியததிலும் மிகவும் கோபத்துடன் பேசினேன்." உங்களுக்கு வேலையின்  ரிஸ்க் தெரிய வேண்டும்.அல்லது தெரிந்தவார்கள் கூறினால்  ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து உங்கள் போக்கில் செய்ய வைத்து விட்டு பிறகு ஏதாவது நடந்தால் எங்கள் தலையில் போடுவது  சரிதானா?"என சத்தம் போட்டேன். மிகவும் வாக்கு வாதம் அதிகமானதால் நாங்கள் அவர்களின் மேலிடம் வரை அனுப்பியிருந்த மெயில் லின் கோப்பி பிரிண்ட் எடுத்து அவரிடம் தரலாம் என்று சைட் ஆபீஸ் வந்து விசாரித்த  போது  அந்த மெயில் ஐ type  மட்டும் செய்து விட்டு அனுப்பாமல் விட்டு விட்டது தெரிந்தது!

இன்னும் வரும்...

புதன், ஆகஸ்ட் 08, 2012

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.18 !..ஸ்ரீரங்கம் 6 !

 பிடுதி (BIDADI )யில்  என் வாழ்க்கை பெரும் போராட்டமாக இருந்தது. தினமும் ஸ்ரீ ராகவேந்திரரிடம் பேசுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.மனம் வெறுப்புற்றதால் கோபம் அதிகமாக வர ஆரம்பித்தது.ஏதாவது வேலை முடியவில்லை என்றாலோ தவறு நடந்தாலோ கீழே உள்ள பொறியாளர்களை எரிந்து விழ ஆரம்பித்தேன்.
ஒரு நாள் எங்களது சைட் டிற்கும்   பக்கத்தில்  உள்ள தொழிற்ச்சாலைக்கும் இடையில் காம்பவுண்ட் சுவர் எழுப்புவது தொடர்பான பேச்சு வந்தது.அந்த வேலையினையும் எனது பொறுப்பில் விட முடிவு செய்தனர்.அது முழுவதும் concrete கொண்டு செய்ய  வேண்டும்.முதல் பாதியில் பிரச்சினை இல்லை எனவே அது சுலபமாக முடிந்து விடும்.ஆனால் இரண்டாவது பாதி பெரும் ரிஸ்க் எடுக்கும் படியாக இருந்தது.  (மொத்தம் கிட்டத் தட்ட 200 மீட்டர் நீளம் , 4 மீட்டர் உயரம் இருக்கும்)

இதை நான் விவாதத்தின் பொது கூறி அந்த பகுதியில் foundation னுக்கு பள்ளம் தோண்டுவதை விடுத்து வேறு வழியில் (pile அடித்து ) செய்யலாம் என்று கூறினேன்.ஏனென்றால் பக்கத்து factory யின் காம்பவுண்ட் சுவர் எங்களது  சைட் ஐ விட உயரமாக இருந்தது.அங்குள்ள நில அமைப்புகள் அப்படி இருக்கும்.மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும். எங்களது நிலம் தாழ் வாகவும் அவர்கள் நிலம் உயரமாகவும் இருந்தது..எனவே எங்கள் பக்கம் foundation னுக்கு குழி பறிக்கும் பொது அது அவர்கள் சுவற்றின் foundation னுக்கும் சுமார் இரண்டு மீட்டர் கீழே செல்ல வேண்டி இருக்கும்.அவ்வாறு செல்லும் போது அவர்களது foundation எங்களது சுவர் கட்டி முடிக்கும் வரை அந்த இரண்டு மீட்டர் உயரத்திற்கு  மண்  மீது அமர்ந்து இருப்பது நன்கு expose ஆகும்.இதன் காரணமாக  மழை திடீரென பெய்தால் மன்கரைந்து ஓடி காம்பவுண்ட் சுவர் கீழே உட்கார்ந்து விடக் கூடிய அபாயம்  மிக மிக அதிகம் இருந்தது.அந்த சுவற்றினை ஒட்டியே பக்கத்து factory யின் scrap room மற்றும் genset ரூம் இரண்டும் அமைந்திருந்தது.சுவர் விழுந்தால் அந்த இரண்டு ரூம்  களுக்கும் பாதிப்பு ஏற்படும்  அபாயமுமிருந்தது 

இது பற்றி நான் கூறிய போது எங்களது client திட்ட மேலாளர் நான் கூறியதை நிராகரித்தார். எனவே முதல் பாதியை முடித்த நான் இரண்டாவது பாதியை செய்ய மறுத்தேன்.என்றாலும் எனக்கும் பல வழிகளில் பிரஷர் தந்து நான் தான் செய்ய வேண்டும் என்று கூறி விட்டனர். மிக மிக ரிஸ்க்கான வேலை என்று நான் கூறியபோதும்  வேறு alternate பற்றி விவாதிக்காமல் பள்ளம் வெட்டச்  சொன்னார்கள்.

இதை நான் எனது மேலதிகாரியிடம் மறுத்துக் கூறி ,இதையும் மீறிச் செய்யச் சொன்னார்கள் என்றால்  பக்கத்து சுவர் விழுந்தால் எங்கள் நிர்வாகம் பொறுப்பேற்காது  என்று கூறி ஒரு மெயில் அனுப்பிவிடுங்கள் சார் என்று கூறினேன்....

 இன்னும் வரும் .....

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

மகான் ஸ்ரீராகவேந்திரரை வணங்குவோம் ...




இன்று (4.08.2012) ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஜீவ சமாதி அடைந்த புனிதமான நாள். இன்று அவரின் பிருந்தாவனங்கள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் ஆராதனை விழாவாக கொண்டாடுவார்கள் .இந்த நாளில் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனம் சென்று அவரை வணங்கி நாமும் அவர் அருளைப் பெறுவோம்.

பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதா யச ! பஜதாம் கற்பக விருக்ஷ்யாய நமதாம் காமதேனுவே!

ஸ்ரீ ராகவேந்திரரின அருளை அனைவரும் பெற அவரின் பாதம் பணிந்து வணங்குகிறேன்