இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, மே 25, 2012

பெண்கள்- அர்த்த சாஸ்த்திரத்தில்..!

பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் அவர்களுக்கான நியதிகள் என்ன
என்பது பற்றி சாணக்யர் சொல்வது என்ன? 




சாணக்கிய முனிவரின் அர்த்த சாஸ்திரம்  அவ்வப்போது சமூக ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் குற்றவியல் தண்டனை குறித்து தக்க அறிவுரைகளை மௌரிய சாம்ராஜ்யத்திடையே பகிர்ந்து வந்திருக்கிறது.

சந்திரகுப்த மௌரிய ரின் அருகில் நின்று கொண்டிருந்த ஒற்றர் படைத்தலைவர் மன்ன ரிடத்திலும் சாணக்கிய முனிவரிடத்திலும் மிகுந்த கவலை தோய்ந்த முகத்துடன், அன்றைய மகளிரின் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு தகவல்களைக் கூறியபடி, முனிவரின் சாஸ்திர அறிவுரைக்காக நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.


ஒரு பெண் தன் கணவன் நீசனாகிவிட் டாலோ, அயல் நாட்டுக்குப் போய்விட்டாலோ, ராஜ துரோகம் செய்தாலோ, தன் உயிருக்கு அவனால் தீங்கு ஏற்படும் என்றாலோ, பெரும்பாவங்கள் செய்து பாவியானவன் என்றாலோ அவனை விட்டுவிட வேண்டும்.


பெண்களுக்கான வாழ்க்கைப் பாதுகாப்பு மிகவும் முக்கியம். சந்திரகுப்த மௌரியரே! இது விஷயத்தில் தக்க ஆணைகளை அவ்வப் போது நீங்கள் இயற்ற வேண்டும்.


மனைவிக்கு ஜீவனாம்சம் தரும்போது தன் குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆகும் செலவைக் கணக்கெடுத்து அதற்குத் தக்கபடி கொடுக்க வேண்டும். அவள் தன்னுடைய ஸ்ரீதனம் முதலானவற்றை வாங்கிக் கொண்டிருந்தாலும் இதைத் தர வேண்டும்.


அந்தப் பெண் கணவனை விட்டுவிட்டு மாமனார் வீட்டில் இருந்தாலோ சொத்தைப் பிரித்துக் கொண்டு போய்விட்டாலோ அவள் ஜீவனாம்ச வழக்கு தொடுக்கக் கூடாது.


கணவன் வெளிநாடு போயிருந்தால்- சூத்திரன், வைசியன், க்ஷத்திரியன், பிராமணன் முதலானவர்களுடைய மனைவிமார்கள் குழந்தைகள் பெறாதவர்களாக இருந்து மறுமணம் செய்ய நினைத்தால் ஒரு வருட காலம் காத்திருக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றவர்களாக இருந்தால் அதற்கு மேல் காத்திருக்க வேண்டும். வெளிநாடு போவதற்கு முன்பு கணவன் அவர்கள் ஜீவனத்துக்கு ஏற்பாடு செய்து விட்டுச் சென்றிருப் பானேயாகில் இரு மடங்கு காலம் எதிர்நோக்கிக் காத் திருக்க வேண்டும்.


கல்வி கற்பதற்காக வெளிநாடு சென்ற அந்தணனுடைய பிள்ளை பெறாத மனைவி பத்து வருடங்களும், பிள்ளைகள் பெற்ற மனைவி பன்னிரண்டு வருடங்களும் காத்திருக்க வேண்டும்.


இந்த காலகட்டத்திற்குப் பிறகு பெண்கள் கணவனுக்காக எதிர்நோக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வாழ்நாள் முழுவ தும் தனித்து வாழலாம் அல்லது அதற்குப் பிறகு வேறு ஒருவனை மணக்கலாம். கணவனு டைய சகோதரர் அல்லது பங்காளிகளை மணக்க வேண்டும்.


இந்தப் பங்காளிகள் வேண்டாமென்று வேறு யாரையாவது மணந்து கொண்டாலோ விபச்சாரம் செய்தாலோ அந்த மனிதன், அந்தப் பெண், அவர்கள் இணையக் காரணமாக இருந்தவன், அவளை மணந்தவன் இவர்கள் அனைவருமே தண்டனை பெற வேண்டிய குற்றவாளிகள்.''


திருமணமாகி கணவனோடு கூடாத பெண் இன்னொருவனுடன் தொடர்பு வைத்துக் கொண்டால் அவளுக்கு 54 வெள்ளிகள் அபராதம்.


கணவன் வெளிநாடு போயிருக்கும்போது தவறான பாதையில் போகும் பெண்ணை கணவனின் உறவினனோ வேலையாளோ அடக்கி வைக்க வேண்டும். திரும்பி வந்த கணவன் அவர்களை மன்னித்துவிட்டால், அந்தப் பெண்ணையும் ஆணையும் தண்டிக் காமல் விட்டுவிடலாம். கணவன் மன்னிக்கா விட்டால் அந்தப் பெண்ணின் செவிகளையும் மூக்கையும் அறுக்க வேண்டும். அந்த ஆணுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!''

நன்றி :திரு.ஜெகாதா நக்கீரன்.காம் 

மேலும் .....




-














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக