இந்த வலைப்பதிவில் தேடு

புதன், அக்டோபர் 31, 2012

நீலம் ,சாண்டி- புயல்..!.

இரண்டு மூன்று நாட்களாக புயல் புயல் என்று ஒரே பேச்சு.அதற்கு ஒரு பெயர் வேறு! இந்தப் புயல் என்பது என்ன அது எப்படி உருவாகிறது? படித்த பலருக்கும் கூட இது தெரியாமல் இருக்கும் .
 
அவர்களுக்காக புயல் என்பது என்ன ?அது எப்படி உருவாகிறது? அது பற்றிய ஒரு தகவல் பதிவு..

நம் புவியில் வீசும் மிக கடுமையான, ஆ... என நம்மை வியக்க வைக்கும் சூறாவளி காற்றே புயல்கள். புயல்களை அவை வழங்கும் இடம் பொறுத்து  பல பெயர்களில் மக்கள் அழைக்கிறார்கள். சூறாவளிகளின் அறிவியல் பெயர் “வெப்பமண்டல புயல்கள்”. புவிநடுக்கோட்டை ஒட்டி, மகர கடக கோடுகளுக்கு இடையே உள்ள வெப்பமும் புழுக்கமும் உள்ள பகுதிகளை “வெப்பமண்டலம்” என்கிறார்கள். அட்லாண்டிக் கடலிலும் கிழக்கு பசிபிக் கடலிலும் தோன்றும் புயல்களை “ஹரிகேன்” என்கின்றனர். இந்து மாக்கடலில் தோன்றும் புயல்களை சைக்ளோன் என்றும் ஜப்பானிய கடலில் தோன்றும் புயல்களை டைஃபூன் என்றும் அழைக்கிறார்கள்.





புயல்கள் என்ன பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை உருவாகும் முறை ஒன்றேதான்.

வெப்பமண்ட்ல புயல்கள் ஈரமும் வெதுவெதுப்புமான் காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் பெரிய இயந்திரங்கள் எனலாம். எனவே தான் அவை, புவிநடுகோட்டு பகுதிகளில்  வெதுவெதுப்பான நீர் உள்ள கடலின் பரப்பில் உருவாகின்றன. 

கடல் மட்டத்தில் இருந்து ஈரமும் வெதுவெதுப்புமான காற்று மேல் நோக்கி எழுகின்றது. அப்படி கடல் மட்டத்தை விட்டு மேல் எழுகையில் கடல் பரப்பை ஒட்டி உள்ள  காற்று குறைகிறது. அதாவது சூடான காற்று மேல் எழுகையில் அங்கு காற்றின் அழுத்தம் குறைகிறது.


அதனால், சுற்றுப்பகுதிகளில் உள்ள உயர் அழுத்த காற்று, அழுத்தம் குறைந்த பகுதிக்குள் முட்டிக்கொண்டு நுழையும். அப்படி நுழையும்  காற்றும் சூடாகிறது. சூடான  காற்று தொடர்ந்து மேல் எழ, சுற்றிலும் உள்ள காற்று சுழன்று அதன் இடத்தை பிடிக்கிறது.இவ்வாறு மீண்டும் மீண்டும் நடக்கிறது.இதனால் அங்கு ஒரு குவியல் போல காற்று மண்டலம் உருவாகிறது. இந்த நிகழ்வை (1) என கொள்க.

 இந்த சூடான, ஈரமான காற்று மேல் உயர்ந்து குளிரும்போது அதில் உள்ள ஈரம் மேகம் ஆக மாற்றம் பெறுகிறது. இவ்வாறு  கடலின் சூட்டாலும் அதன் பரப்பில் ஆவியாகும் நீராலும் மேகத்திரளும் காற்றின் சுழற்சியும் பெருகுகிறது


புவிநடுக்கோட்டின் வடபுலத்தில் உருவாகும் புயல்கள் வலஞ்சுழியாகவும், தென்புலத்தில் உருவாகும் புயல்கள் இடஞ்சுழியாகவும் சுழலுகின்றன. இந்த வேறுபாட்டுக்கு புவி  தன் அச்சு மேல் சுழல்வதே  காரணம்.

 புயலில் இது போன்ற பல மிகபெரும் வட்டவடிவு கற்றைகளாக உருவாகின்றன

உருமு மேகத்தை குமுலஸ் நிம்பஸ் என்கிறார்கள்.  இது இடியும் மின்னலும் கூடிய ஒரு வகை மேகம். இது  அடர்த்தியான கோபுரங்கள் போல் வானில் 30,000 அடிக்கும் மேலான  உயர்மட்டத்தை எட்டும் தன்மையுடையதாக இருக்கும். அதில் உறைபனி துகள்களால் இழைகள் ஓடிவது போல உச்சி தவிர பிற கூம்பு வடிவில் இருக்கும். இவை  ஒரே மேகமாகவோ அல்லது பல தலைகளுடன் அடிப்பாகம் மட்டும் இணைந்த மேக திரளாகவோ இருக்கும்.

இந்த சூறாவளி அமைப்பு  வேகம் வேகமாக சுழல, அதன் நடுவிலே அதன் சுழிக்கண் உருவாகிறது. அதன் சுழிக்கண் அமைதியாகவும் தெளிவாகவும், குறைந்த காற்றழுத்தம் உள்ளதாகவும் இருக்கும்.  உயர் அழுத்த காற்று அந்த மேலிருந்து சுழிக்கண் வழியாக கீழ் நோக்கி பாயும்.



சுழலுகின்ற சூறாவளி காற்றின் வேகம் 39 மைல்/மணிக்கு எட்டும்போது அந்த சூறாவளியை ”வெப்ப மண்டல சூறாவளி” என்று
அழைக்கிறார்கள்.. அதுவே  74 மைல்/மணிக்கு எட்டும்போது அலுவல மொழியாக “ட்ராபிகள் சைக்ளோன்” (தமிழில் வெப்ப மண்டல புயல் எனலாம்) அல்லது ஹரிகேன் என அழைக்கிறார்கள்..

இந்த (வெப்ப மண்டல) புயல்கள்  நிலப்பகுதியை தொடும்போது தன் வலுவை இழக்க தொடங்கும். காரணம், அவற்றுக்கு, இனி மேலும் சூடான கடல்நீரின் ஆற்றல் ஊட்டப்படுவது இல்லை.அதாவது நிகழ்வு (1)நடை பெற வாய்ப்பு இல்லாமல் போகிறது. இருப்பினும், அவை உள்நாட்டில் வெகு தொலைவு நகர்ந்து முற்றிலும் மடிவதற்குள்,  பல சென்டிமீட்டர்  மழையை கொட்டுவதோடு, காற்றினால் விளையும் சேதங்களுக்கும்  காரணமாகிறது.

(வெப்ப மண்டல) புயல்களின் வகைப்பாடுகளை நாசா வடிவமைக்கிறது . 

அமெரிக்க தேசீய கடல் மற்றும் வளிமணடல நிருவாகத்துறைனரால் இயக்கபப்டும் GOES செயற்கஈகோள்கள்  தரைமட்டத்தில் இருந்து 23,000 அடி  உயரத்தில் நிலைகொண்டு இந்த புயல்களை கண்காணித்துக்கொண்டு இருக்கின்றன.. இக்கோள்கள் எடுக்கும் படங்கள் , வானிலை முன்னறிவிப்பாளர்களுக்கு புயல்கள் எங்கு எப்போது தோன்றும் என கணித்து சொல்வதற்கு உதவுகின்றன.இதனால்  பல உயிர்களை காக்க முடிகிறது .மேலும் தகுந்த முன்னேற்பாடுகளையும் எடுக்க முடிகிறது.

சரி இந்தப் புயல்களின் பெயர்கள்?உலகில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையங்கள்  தங்களுக்குள் ஒரு குழு அமைத்துக் கொண்டு கடல்களை பிரித்துக் கொண்டு  ஒவ்வொரு கடலிலும் உருவாகும் அல்லது உருவாகப் போகும் புயல் களுக்கு பெயர்களை  சூட்டுகின்றன.அந்தப் பெயர்கள்  சுழற்சி முறையில்  ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயராக   வைக்கப் படும். (ஒவ்வொரு  முறையும் ஒவ்வொரு  நாடு வைக்கும் பெயர் )ஏனென்றால் பிற்காலத்தில் எந்தப் புயலால்  எவ்வளவு சேதம் விளைந்தது என்பதை அறிய ஏதுவாக இருக்கும் என்பதால்.

செவ்வாய், அக்டோபர் 30, 2012

மனம்...10 !

மனதைப் பற்றி எழுதி நாளாகிவிட்டது.!

கட்டிலில் படுத்துக் கொண்டு மனதை ஓடவிட்டேன்.நமது ஒவ்வொரு செயலையும் நமது மனம் தான் தீர்மானிக்கிறது. கண்ணதாசன் ஒரு பாடலில் எழுதி இருப்பார்."உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை!" 
அருமையான வார்த்தைகள்.
இரவு நேரம் ஒரு சுடுகாட்டின் வழியே செல்லவேண்டும்.சிலர் என்ன சொல்கிறார்கள்?அப்பா சுடுகாட்டுப் பக்கமா,இந்த நேரமா,நான்வரமாட்டேன் என்கிறார்கள்.வேறு சிலரோ அட ,என்ன பயம் வேண்டி கிடக்குது?நான் போறேன் வர்றதா இருந்தா  வா.இல்லைன்னா விடிஞ்சதும் வா.என்று கூறிவிட்டு நடையைக் கட்டுகிறார்கள்.
இரண்டு பேருக்குமே அவர் மனது சொல்வது தானே? ஒருவருக்கு பயம்.மற்றவருக்கு பயம் இல்லை.இரண்டையும் மனது தானே தீர்மானித்தது?
இதே போல ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்க்கலாம்.எல்லோருக்குமே பெரும்பாலும் நாளை என்ன ஆகுமோ என்ற பயம் தான் முன்னே நிற்கிறது.பரீட்சையில் பெயில் ஆனா என்ன பண்ணறது?கல்யாணம் நின்னு போயிட்ட என்ன பண்ணறது?வேலை போய் விட்டா  என்ன பண்ணறது? அவர் தப்பா  நினைப்பாரோ? இவர் திட்டுவாரோ என எல்லாவற்றிலும் மனம் எதிரிடை யாகவே நினைக்கிறது.
இப்படி எதிரிடை யாக நினைக்கும் போது தான் வாழ்க்கையைப் பற்றிய பயம் வருகிறது.
ஆனால் உண்மையில் நடப்பது என்ன? எல்லோரது வாழ்க்கையிலும் அவர்கள் நினைப்பது போல எல்லாவற்றிலும்  எதிரிடை யாக நடப்பது இல்லை.கிட்டத்தட்ட 90% நாம் நினைப்பது போலவே எதிரிடையாக நடப்பதில்லை எனவும் நாம் தான் எதிரிடையாக  நினைத்து வீணாக பயந்து மனது ஒடிந்து போகிறோம் என மன நல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
எண்ணிப் பாருங்கள் .அப்படியே எதிரிடையாக நடந்து விட்டாலும் தான் என்ன செய்யப் போகிறோம்? அதைக் கடந்து தானே வரப் போகிறோம்? பின் எதற்காக  முன்னமே  அதை நினைத்து வருந்த வேண்டும்-பயப் பட வேண்டும்.?
நமது மனது என்ன நினைத்தாலும் இரண்டே இரண்டு சாத்தியக் கூறுகள் தான் உள்ளன. ஒன்று பயப்படுவது போல ஒன்றும் நடக்கப் போவது இல்லை. அல்லது பயந்தது  போலவே நடந்து  விடும்.
 நாம் பயந்தது போல நடக்கவில்லையானால்  முன்பு அதை நினைத்து நாம் மனத்தைக் குழப்பிக் கொண்டது  தான் மிச்சம்.
நினைத்ததுபோலவே நடந்து விட்டால் மட்டும் என்ன செய்யப் போகிறோம்? அதைக் கடந்து வந்து தானே ஆக வேண்டும்?

இன்னும் அலசுவோம்...


ஞாயிறு, அக்டோபர் 21, 2012

பெண்கள்......!

தாயாக பெண்களைப் பார்க்கும் போது அவளின் கருணையும் அன்பும் அளவிடர்க் கரியதாக இருக்கிறது.அதுவே பெண்களை சாதாரணமாகப் பார்க்கும் போது இத்தகைய குணங்கள் இருப்பது தெரியவருகிறது.

எனக்குத் தெரிந்தவரை பெரும்பாலான பெண்கள் நமது சாஸ்திரங்களும் புராணங்களும்,இதிகாசங்களும் கூறியதைப் போலவே இருப்பதாக உணருகிறேன் .உண்மையான அன்பினை எந்தப் பெண்ணும் மதிப்பதாகத  தெரியவில்லை.

ஒரு பெண்ணிடம் எவ்வளவுதான் அன்புடன் பழகினாலும் ,அவளிடம் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நன் வேண்டுமா ?அல்லது பணம் தான் முக்கியமா?என்று கேட்டால் பணம் தான் வேண்டும்  என பெரும்பாலான பெண்கள் டக்கென்று  கூறுவார்கள். உண்மையான அன்பிற்கு பெண்கள் தரும் மதிப்பு அவ்வளவு தான்.இவைகள் என் வாழ்வில் நான் உணர்ந்தவை. நமது முன்னோர்கள் மேலும் என்னென்ன கூறி இருக்கிறார்கள் என்று  பார்ப்போமா?


11- பெண்கள் பயங்கரமானவர்கள். கொடிய சக்திகளை உடையவர்கள். தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும் அவர்கள் நேசிக்கமாட்டார்கள். விரும்பமாட்டார்கள். (மகாபாரதம் அனுஷன் பர்வதம் : 43-23)

12-உயிரைக் கொல்லும் அதர்வண மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள். (மேற்படி: 43-24)


13- ஒருவனுடன்  கூடி வாழ ஒத்துக் கொண்டாலும் பின்னர் மற்றவர்களுடன் கூடிக் கொண்டு முன்னவனை விட்டுப் பிரியவும் தயாராகவிருப்பார்கள்.(மேற்படி:43-24)


14- அவர்கள் ஒர் ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள்.(மேற்படி: 43-24)


15- ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக் கூடாது. அவர்களிடம் பொறாமைப்படக் கூடிய (நல்லதன்மை) ஒன்றுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களிடம் சம்பந்தத்தை வைத்துக் கொள்ளவேண்டும். அந்தப்படிக்கில்லாமல் வேறு விதமாக ஒருவன் பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கொண்டால் அவன் நிச்சயமாக அழிந்துப் போவான்.(மேற்படி: 43-24) எல்லா மனிதர்களும் கடவுளாக இருந்ததைக் கண்டு தேவர்கள் பயந்து பாட்டனிடம் சென்றார்கள் பாட்டன் இவர்கள் மனதிலுள்ளதை அறிந்து மனிதர்களின் வீழ்ச்சிக்காகப் பெண்களை சிருஷ்டி செய்தார்.


16- ஆகவே பெண்கள் மனித சமூதாயத்தின் வீழ்ச்சிக்காகப் பிறந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.


17- பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களானதால் அவர்கள் நிலையற்ற ஸ்திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது.


18- இவ்வுலகில் அவர்களை எவ்வளவு பாதுகாப்புடன் வைத்திருந்தாலும் அவர்களுக்கு ஆண்களிடமுள்ள ஆசையினாலும், அவர்களது நிலையற்ற தன்மையாலும், இயற்கையாகவே அவர்களுக்கு உள்ளமில்லாததாலும், தங்கள் கணவர்களிடம் விசுவாசமற்றவர்களாய் இருப்பார்கள்.(மனு:9-15)


19- இராமாயணம் ஆரண்ய காண்டம்: 13-5-6)உலகம் தோன்றியது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலைத் தண்ணீர் போலச் சலனப் புத்தியுடையவர்கள். வாள் போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள்.




20-ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவர் யாருமிருக்க முடியாது.


21- ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொல்லத் தயங்கமாட்டாள்.


22- பாவத ஸ்கந்தம்: (4-14. 42-8. 4-36) பெண்கள் இரக்கமில்லாமல் புலிக்கு ஒப்பிடப் பட்டிருக்கிறார்கள். கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இழிவு படுத்தப்பட்டிருக்கிறார்கள்.


23- பெண்கள் நிலையற்ற சுபாவமுடையவர்கள். அவர்கள் குற்றமுள்ளவர்கள்.


24- சுக்ரா: (3-163) பெண் இனத்திற்கே கீழ்கண்ட 8- குணங்களும் உரிமையானவைகள்:பொய், நிலையில்லாமை, வஞ்சகம், மூடத்தனம், பேராசை, மாசு, கொடுமை, துடுக்குத்தனம்.



   
மீண்டும்  சொல்கிறேன் ....இவை யாவும் எனது கருத்துக்கள் அல்ல .புராணங்களிலிருந்தும்  இதிகாசங்களிலிருந்தும்  வேதத்திலிருந்தும்   மேலும் பல  ஞாநிகளும் கூறியவற்றையே தொகுத்து அளித்திருக்கிறேன். இவைகளுக்கு விலக்கான பத்தினிப் பெண்களும் உண்டு என்பதையும்  கூற விரும்புகிறேன்.



 


                                                                                                          
நன்றி...!


வியாழன், அக்டோபர் 04, 2012

பெண்கள்....!

 இனி நான் எழுதும் பெண்களைப் பற்றிய  தகவல்கள்  கொஞ்சம்  கடுமையானவை. இவைகள் அனைத்தும்  நம் முன்னோர்கள் கூறியவைகள்  தான். இத்தகைய  குணங்களை உடைய சில பெண்களை  நான்  எனது வாழ்க்கையில்    பார்த்ததுண்டு.

 பெண்களைப் பற்றி இந்து மத ஆதாரங்களான வேத சாஸ்திரங்கள் புராண இதிகாசங்கள் ஆகியவைகளிலும், பண்டைய அரசு நீதியிலும் காணப்படுவதைத் தான் நான் இங்கு தொகுத்துக குறிப்பிட்டிருக்கிறேன். இவைகள் எனது  கூற்றுக்கள் அல்ல !இதைப்  படிக்கும் எந்தப் பெண்ணிற்கும் கோபம் வந்தால் நான் பொறுப்பல்ல....!.

1- ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது: (ரிக்வேதம் - 8-3-17) பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்கள். அவர்கள் நம்பத்தகாதவர்கள்
 
2- ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது: (ரிக்வேதம் - 10-95-10) பெண்கள் நட்பு நீடித்ததல்ல. அவர்கள் கழுதைப்புலியின் தன்மையுடையவர்கள்.
 
3- யக்ஞய வல்கியர் என்பவரால் வகுக்கப்பட்ட தர்ம நீதி:மூன்று பொருட்களை அதாவது செல்வத்தை, புஸ்தகங்களை, பெண்களை வேறொருவன் ஆதிக்கத்தில் விட்டு வைக்காதே.


4- மனு சொல்லுவதைக் கவனியுங்கள். இந்த உலகில் ஆண்கள் கற்பழிக்கும் இயல்பைப் பெண்கள் பெற்றிருப்பதனால் தான் புத்திசாலிகள் பெண்களுக்கு மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்களாகிறார்கள்.
 
5- மேற்படி: 2-24. இந்த விதத்தில் படித்த ஆண்களையும் பெண்கள் வசியப்படுத்தித் தப்பான வழியில் செலுத்தி இச்சைக்கும் போகத்திற்கும் அடிமையாக்கி விடுவார்கள்.
 
6- மனு பெண்களுக்குப் போகத்தில் ஆசை, நகையில் ஆசை, இருப்பில் ஆசை, என்பவைகளைக் கற்பித்ததோடு களங்கமுள்ள சிந்தையையும், சினத்தையும் , அயோக்கியத்தனத்தையும், வஞ்சகத்தையும், துர்நடத்தையும் பெண்களின் இலட்சணமாக வருணித்திருக்கிறார்
 பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை. 
 
7- எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லை. ஆறுகள் கொண்டு வரும் எந்த அளவிலும், நீரினாலும், கடலுக்கு ஆசை தீருவதில்லை. எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும் கொலைக்காரன் சமாதானம் அடைவதில்லை. இதுப்போலப் பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விட மாட்டார்கள்.
 
8-மகாபாரதம். நாசகாலன், ஊழிக்காற்று, பாதாளக் கடவுளாகிய எமன், இடைவிடாமல் நெருப்பைக் கக்குகின்ற அக்கினி, ஊற்றுவாய், சவரக்கத்தியின் கூர்மை, கொடிய விஷம், பாம்பு, நெருப்பு- ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால் எத்தனை கேட்டை விளைவிக்கக் கூடியதாமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள்.
 
9 - மகாபாரதம் அனுஷன் பர்வதம்: (39-8) பெண்ணின் அறிவு கண்டுபிடிக்க முடியாத ஆழமானது அல்லது தந்திரமுள்ளது.


10- பெண்ணை விடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகின்ற நெருப்புப் போன்றவள். பெண் மயக்கும் (வஞ்சகி) குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரே பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.

இன்னும் வரும்....!