இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், ஜூன் 25, 2012

ஒரு காதல் என்பது...!

             காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு.உண்மையான காதல் இருந்தால் வாழ்க்கையில் அதன் சுகமே வேறு.வெறும் இனக் கவர்ச்சியாக இல்லாமல் " எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருப்பதனாலே இனி என்ன வேண்டும்" என்பதாக அமைந்து விட்டால் அதைவிட ஒரு இன்பமான வாழ்க்கை கிடையாது.

வலைப் பக்கத்தில் என்னைக் கவர்ந்த காதல் பற்றிய இந்தக் கவிதைகளை உங்களுக்கும் தருகிறேன்.

உண்மையிலேயே ஹாசன் கமல் யாரையாவது காதலித்து தோற்ற வேதனையில் தான்  இதை எழுதினாரா தெரியவில்லை.

ஒன்று நிச்சயம் .அது உண்மையானால் இவ்வளவு உருகும் ஒருவரைக் கை நழுவ விட்டது அந்தப் பெண்ணிற்குத்தான் மிகப் பெரிய  இழப்பே தவிர அவருக்கல்ல.!




1) உனக்காவே பிறந்த நான் இறைவனிடம் வரம் கேட்டால் உன்னோடு வாழ்ந்து உன்னில் இறந்துபோக வேண்டுமெனக் கேட்பேன்

2) நாம் ஒன்றாய் கழித்த அந்த நினைவுகளை என் இதயத்தில் செதுக்கி விட்டேன்.. என் கனவுகளை கவிதைகளாக வரைந்து கண்ணீரில் கரைக்கிறேன். யாருக்கும் தெரியாமல் என்னுயிரில் கலந்த உன்னை மட்டும் பிரிந்து செல்ல நினைக்காதே…… நானில்லாமல்நீயிருப்பாய்……… ஆனால்….. நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்….



  3) நீ..!!! எனக்கு வேண்டும்.. நான் வேண்டும் வரம் இது ஒன்று தான்....


 4) வானவில்லின் அழகு சிறிது நேரம் தான் 
ஆனால் உந்தன் நினைவுகள் என் காலம் முழுவதும்..!

  5) நீ பிறக்காமல் இருந்திருந்தால் 
நான் உன்னை நினைக்காமல் இருந்திருப்பேன் 
நீ பிறந்து விட்டதால் நான் இறந்து கொண்டிருக்கிறேன் 

 6) எங்கே என் தேவதை? உன்னை தேடி கலைத்து விட்டேன் 
தண்ணிர் குடிக்க சென்றால் நீராக என்னுள் செல்கிறாய் 
உறங்க நினைத்தால்  கனவாக என்னுடன் நிலைக்கிறாய் 
 
உன்னைப் பற்றி கவி எழுத நினைத்தால்  வார்த்தையாக விழுகிறாய் 
வெளிச்சம் தேடினால் ஒளியாக மிளிர்கிறாய் 
நான் எங்கு சென்றாலும் என்னுடன் நீ  இருக்கும் போது உன்னை ஏன் தேட வேண்டும்
உன் நினைவோடு உன் வருகை வரை காத்திருப்பேன் என்றும் உன் நினைவாக நான்!!!

 7) வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன் ,, கண்டேன்  உன்னை இன்னொருவனுடன் ,, வடியுதடி என் கண்களில் கண்ணீர் அல்ல இரத்தம்!

 

 8) உனக்காவே பிறந்த நான் இறைவனிடம் வரம் கேட்டால் உன்னோடு வாழ்ந்து உன்னில் இறந்துபோக வேண்டுமெனக் கேட்பேன் 


 9) மனதுக்கு பிடித்தவர்களை பார்க்காமல் -கூட
இருந்து விடலாம் .......! - ஆனால்
நினைக்காமல் ஒரு போதும்
இருக்க முடியாது ......!
என்றும் உன் நினைவில் நான்.

பிரிந்து போன உன் நினைவுகள் ஒவ்வொரு நாளும் என் கண்களுக்குள் வந்து கொண்டு தான் இருக்கின்றன ... ??? ... கனவாக அல்ல ... ??? ... கண்ணீராக ..!.

 

 10) என் உயிரை எடுத்துக்கொண்டு என்னை விட்டு போனவளே என் இதயத்தை கிழித்துவிட்டு நிம்மதியாய் சென்றுவிட்டாய்... உன்னையே உலகம் என நம்பும் நான் உனக்காக சாவதா? என்னையே உலகம் என நம்பும் என் குடும்பத்துக்காக வாழ்வதா?

 

 11) நான் உன்னை சந்திக்காமலே இருந்திருக்கலாம்
என் உயிரையும் தாண்டி சென்று விட்டது உன் நினைவுகள்
உன்னை மறப்பதா என்னையே மறப்பதா முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறேன்
உன்னை மறக்க நினைத்தால் என்னையே மறக்க செய்கிறது உன் நினைவுகள்

 

 12) நீ வேறு, நான் வேறல்ல என்பதாய் வளர்ந்தது நம் நட்பு நினைத்துக் கூட பார்க்கவில்லை நீ என்னை பிரிவாய்யென்று என்னை நீ மறந்ததை நினைத்து துடித்துப் போகிறேன்!

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             


http://hassnkamal.blogspot.in


 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக