இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், மார்ச் 12, 2013

ஸ்ரீரங்கம் -- மகேந்திர மங்களம்

மகேந்திர மங்களம் ஸ்ரீரங்கத்திலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில்  முசிறியைத்   தாண்டி உள்ள ஒரு சிறிய கிராமம்.இங்கு பெரியவா சந்திர சேகரேந்திர சங்கராச்சாரியார் சுவாமிகள் இளம் வயதில் தங்கி இருந்து குருகுலம் பயின்ற பாடசாலை இருக்கிறது .அவர் தங்கியிருந்த, அவர் பாதம் பட்டமண்ணிற்கு  ,அவர் உண்டு உறங்கிய அந்த ,வீட்டிற்குச்  செல்லும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.எனது நண்பர் திரு ஸ்ரீதர் (ரயில்வே ) 
அவர்களின் மூலம் இதைத் தெரிந்து கொண்டு அவருடன் கடந்த ஞாயிறு அன்று அங்கு சென்று தரிசனம் செய்து, சிறிது நேரம் தியானம் செய்து விட்டு வந்தேன்.மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு உண்டானது.மறைந்த எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்களின் பாட்டனார் திரு. சிங்கமையாங்கார் அவர்களுக்கு   உரிய இந்த வீட்டினையும் அதற்காக சில சொத்துக்களையும் அவர் இந்த பாட சாலையை நிர்வகிக்க தானமாக கொடுத்து விட்டதாக இந்த கல் வெட்டு கூறுகிறது.தற்போது ஸ்ரீரங்கம் கீழச் சித்திரை வீதி யில் திரு சுஜாதா அவர்களின் பூர்வீக வீட்டிற்கு எதிரில் அமைந்துள்ள கு.சி.பாடசாலையின் நிர்வாகத்தின் கீழ் இது பராமரிக்கப் பட்டு வருவதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.
 




வாய்ப்பிருந்தால் நீங்களும் சென்று வரலாம்.இல்லை என்றால் இந்தப் படங்களைப் பார்த்து அந்த உணர்வினை நீங்களும் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக