இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், மே 27, 2013

கொடைக்கானல்...!


 இரண்டு நாட்கள் முன் இங்கே நிலவும்  அக்னி நட்சத்திர வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க கொடைக்கானல் சென்றேன்.ஏறத்தாழ 7 வருடங்களுக்குப்  பின் இப்போது மீண்டும் செல்கிறேன்.நல்ல வேறுபாடு தெரிந்தது. ஏகப் பட்ட கும்பல் அம்முகிறது.எங்கே சென்றாலும் ட்ராபிக் ஜாம் தான்.எல்லா tourist spot டிலும் நுழைவுக் கட்டணம் போட்டு விட்டார்கள்.முன்பு குணா குகை சென்றபோது கட்டணம் கிடையாது .இப்போது வசூலிக்கிறார்கள்.




 கடைகளும் நிறைய வைத்திருக்கிறார்கள்.நிறைய காசு பார்க்கிறார்கள்.ஒரு சோளக்கருது ரூ 20 என்கிறார்கள்.அதையும் மக்கள் கும்பல் கும்பலாக மொய்த்து வாங்குகிறார்கள்.யாரும் பணத்தை சட்டை செய்வதாகத் தெரியவில்லை.ப.சிதம்பரம் சொன்னதுபோல மக்களுக்கு வாங்கும் சக்தி கூடிப் போயிருக்கிறது!



 நான் சென்றபோது நல்ல காலநிலை நிலவியது.சிலு சிலு எனத்தூரலுடன் சாரல் மழையில் நனைந்து அந்தக் குளூரினை  அனுபவித்தேன்.கொடைகானல் நகராட்சிக்கு நல்ல வருமானம் டூரிஸ்டுகளால் கிடைக்கிறது.சாலைகளை இன்னும் கொஞ்சம் விரிவுசெய்தால் நன்றாக இருக்கும்.பார்கிங் ப்ராப்ளம் நிறைய.
 வரும் போது பழனி செல்லும் மலைப் பாதையில் வந்தோம்.மிகவும் திர்ல்லிங்கான அனுபவமாக இருந்தது.குறுகிய சாலை,வளைவுகள் அதிகம்..ஹேர் பின் பெண்டுகள் 14 இருக்கிறது.ஒருபக்கம் முழுவதும் பள்ளத்தாக்கு மட்டுமே இருக்கிறது.மலைச் சரிவு எஸ்டேட்டுகளை பச்சைப் பசேலென பார்ப் பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கிறது.அதன் காட்சிகள் தான் இவைகள்.இவ்வழியே வருவது கொஞ்சம் சுற்று.அதிக கிலோமீட்டர்கள்.நல்ல அனுபவம் உள்ள ஓட்டுனர்களே ஓட்டமுடியும்.




கொடைக்கானலுக்குச் சென்று வர நினைப்பவர்கள் இந்த வழியிலும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம்.யான் பெற்ற பேரு பெருக இவ் வையகம்...!