இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், பிப்ரவரி 09, 2012

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.....12 !

 நான் பெங்களூர் செல்லும் முன் என் நினைவிற்கு வந்தது குப்தா வின் பெயர் தான்.வேலூர் ப்ரொஜெக்டில் எங்களது சப் contractor ஆகஇருந்த குப்தா தான் எனக்குத் தெரிந்த, பெங்களூரில் உள்ள ஒரே ஆள்!  நான் ஆகஸ்ட் 16 அன்று வேலையில் சேருவதாக சொல்லியிருந்தேன். ஆகஸ்ட் 15 அன்று வேலூர் காட்பாடியில் train பிடித்து இரவு பெங்களுர் சென்று தங்கி விட்டு மறு நாள் வேலையில் சேருவதாக திட்டம் .எனவே 15  ஆம் தேதி காலையில் குப்தா விற்குப் போன் செய்தேன். ஆனால் குப்தா, தான் இப்போது  சித்ரதுர்காவில் இருப்பதாகவும் மறுநாள் அங்கு நடைபெறும் வேலை சம்மந்தமாக ஒரு மீட்டிங் இருப்பதால் தன்னால் வர இயலாது என்றும் கூறிவிட்டார்.
வேறு வழியில்லாமல் தனியே பெங்களுர் கிளம்பினேன். மதியம் காட்பாடியில் வண்டியில் ஏறி இரவு ஒன்பது மணிக்கு பெங்களுர் மெஜஸ்டிக் கில் இறங்கினேன். முன்  பின் தெரியாத மொழி புரியாத ஊரில் இறங்கி வெளியில் வந்தேன். லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. சுற்றிலும் ஏகப்பட்ட ஹோட்டல் கள், lodge  கள் நியான் விளக்கில் மின்னிக் கொண்டிருந்தன. எதை தேர்ந்தெடுத்து  தங்குவது? நாளை காலை எப்படி பன்னீர் கட்டா ரோட்டில் உள்ள அந்த நிறுவனத்தைக் கண்டுபிடிப்பது? பன்னீர் கட்டா  ரோடிற்கு எப்படிச் செல்ல வேண்டும்?ஒன்றும் புரியவில்லை.

ஸ்ரீ ராகவேந்திரரை நினைத்துக் கொண்டேன். ராகவேந்திரா எப்படியாவது இன்றிரவு  தங்குவதற்கும் நாளை இடத்தைக் கண்டு பிடிப்பதற்கும் உதவி செய். வேலையில் சேர்ந்து விட்டால் பிறகு சுதாரித்துக் கொள்வேன் .நீதான் உதவவேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்

மனதில் ஸ்ரீ ராகவேந்திரரை தியானித்துக் கொண்டே ஒவ்வொரு lodge ஆக பார்த்துக் கொண்டு, சிலவற்றை நானே நிராகரித்துக் கொண்டு ஒவ்வொரு lodge ஆக தாண்டி வந்தேன். ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து வலப்புறமாக உள்ள ரோடில் திரும்பி நேரே நான்கு ரோடுகள் சந்திக்கும் இடம் வரை வந்துவிட்டேன். எல்லா ஹோட்டல் களை விடவும் ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல் &lodge என்று ஒரு கார்னரில் இருந்த அந்த lodge ஐக் கண்டதும் எனக்குள் எதோ  ஒரு உள்ளுணர்வு இந்த ஹோடேலிலேயே தங்கலாம்  என்று கூறியது. அந்த ஹோட்டல் ஐ நோக்கி நடந்தேன் . இடப் புறமாக உள்ள படிக் கட்டு வழியாக lodge  க்கு செல்ல ஏறினேன். படி கட்டின் லேண்டிங்கில்  மிகப் பெரிய மரத்தினால் செய்யப் பட்ட ஸ்ரீ ராகவேந்திரர் !விளக்குகள்  ஏற்றப்பட்டு ஊதுவத்தி வாசனையுடன் மங்களகரமாக என்னை வரவேற்றார்!

இன்னும் வரும்....!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக