ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹை ஸ்கூலில் எங்கள் அடைய வளஞ்சான் தெரு நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கிரிக்கெட் டௌர்னெமெண்ட் ஒவொரு முழு ஆண்டு தேர்வு விடுமுறையின் போதும் நடத்துவோம். ஹை ஸ்கூலில் பெர்மிஷென் வாங்குவதே ஒரு பெரும் பாடு.கோவிந்தன் தான் அந்த வேலையை பார்த்துக் கொள்வான்.அடுத்து பிட்ச் தயார் பண்ணும் வேலை.காலங்கார்த்தால ஆறு மணிக்கெல்லாம் highschool சென்று விடுவோம். புற்களை எல்லாம் வெட்டி எடுத்து நிலத்தை சமன் செய்து roller வைத்து உருட்டி ஒரு வழியாக பிட்சை தயார் செய்வோம்.
மேல சிந்தாமணி ,திருவானைக்காவல் ,டோல்கேட் பக்கமிருந்தெல்லாம் டீம் வரும்.கிட்டத்தட்ட பதினாறு அல்லது பதினெட்டு டீம் வரும். எங்களது டீமின் பெயர் விண்டீஸ்! அப்போதெல்லாம் வெஸ்ட் இண்டீஸ் டீம் தானே சிறந்து விளங்கும்...!அதன் சுருக்கம் தான் விண்டீஸ்! கோவிந்தன், பாம்பு பாலாஜி ,மார்ஷல் என்ற ராமச்சந்திரன் (அவ்வளவு வேகமாக பந்து வீசுவானாம்) offside நாராயணன் ( ஆப் சைடு அடிக்கும் ஷாட் கள் வலுவானதாக இருக்கும் என்பதால் -ஸ்பின் bowler கூட..!) R S வாசு, வெங்கிட்டு (நிரந்தர விக்கெட் கீப்பர்!)சொக்கி ,ஆனந்து ,ஜவகர் , அப்புறம் எப்போதாவது ஆள் பத்தவில்லை என்றால் நான் (சின்ன மார்ஷல் !)இது தான் எங்கள் விண்டீஸ் டீம்!
ஸ்ரீரங்கத்திலிருந்தே சித்திரை வீதி டீம் ,உத்திரை வீதி டீம், அம்மாமண்டம் ரோடு டீம்,ஸ்ரீனிவாச நகர்,ரெங்க நகர் என பல டீம்கள் கலந்து கொள்ளும். சும்மா சொல்லக் கூடாது .ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும்.லீக் சுற்று ,நாக் அவுட் சுற்று என்று நடக்கும்.
லேடி அம்பயராக நின்றால் போச்சு! அவன் விக்கெட்டிலிருந்து இரண்டு ஸ்டெப்பின்னாலசென்றால்கண்டிப்பாக அவுட்தரப் போகிறான் என்று தெரிந்து
கொள்ளலாம்!பிறகு," ஏண்டா இதுக்குப் போய் அவுட் தந்த ?"என்று கேட்டால் "போடா துரை எவ்வளவு ஸ்ட்ராங்கா அப்பீல் கேட்டான் , அதான் கொடுத்திட்டேன்" என்பான்!
நாராயணன் offside ஷாட் அடிப்பதில் மன்னன்.நாராயணன் இறங்கினால் எதிர் அணியினர் offside பீல்டிங் ஐ ஸ்ட்ராங் செய்து கொண்டு விடுவார்கள்.எப்படி இருந்தாலும் கன்சிஸ்டன்ட் ஆக ஒரு பதினைந்து அல்லது இருபது ரன் அடிக்காமல் அவுட் ஆக மாட்டான்! பந்து வீச்சிலும் அதே போல .ஸ்பின் போடுவதில் கில்லாடி. பந்து கண்ணா பின்னாவென்று திரும்பும்.இரண்டு விக்கெட் ஆவது எடுத்து விடுவான்.
மார்ஷல் என்கிற ராம சந்திரன்- முதல் ஸ்பெல் பௌலிங் அவனுடயதாகத்தான் இருக்கும். பயங்கர ஸ்பீடாக பந்து வீசுவான்.அதே போல ஆப் சைடு பீல்டிங்கிலும் கில்லாடி.கன்னாபின்னாவென்று விழுந்து ,பாய்ந்தெல்லாம் பந்தைப் பிடிப்பான். மேட்ச் முடிந்ததும் முரளி "அந்த கேட்ச் எப்படி பிடித்தேன் பாத்தியா? அந்த ரன்னை எப்படி தடுத்தேன் பாத்தியா?என்பான்! கால் ,கையிலெல்லாம் சிராய்ப்புடன்!" இன்னொரு ராமச்சந்திரனும் ஸ்பீட் பௌலிங் போடுவான்.அவன் பெயர் ஜொள்ளு ராமச்சந்திரன்!
இன்னும் வரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக