இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, ஏப்ரல் 06, 2012

அழகான கொலைகாரி...!

என்னுயிரே...என்னுயிரே....
பெண்ணாக  இங்கு வந்து   ஏன் பிறந்தாய்..?
பெண்ணாகப் பிறந்தாலும் பரவாயில்லை
அழகான ஓவியம் போல் 
அங்கமெல்லாம் ஏன் கொண்டாய்? .
அழகான ஓவியமாய் இருந்தாலும் பரவாயில்லை..
ஆசை கொண்டு அலையும்படி 
என் கண்ணில் ஏன் விழுந்தாய்?
கண்களிலே விழுந்தாலும் பரவாயில்லை..
காதல் என்னும் படுகுழியில் 
ஏன் என்னை விழ வைத்தாய்?
படுகுழியில் விழுந்தாலும் பரவாயில்லை
உயிரோடு உயிராக 
என்னுடன் ஏன் கலந்தாய்?
உயிரோடு உடலோடு உணர்வோடு
கலந்துவிட்டு - எனை 
ஒத்தையிலே வாடவிட்டு 
ஓடிவிட எண்ணுகிறாய்...
என்றாலும் பரவாயில்லை 
எனைக் கொன்று விட்டு நீ சென்றுவிடு..
உன் நினைவால்
 உருகி  உருகி இறப்பதை விட
ஒரே நாளில் உனக்காக 
என் உயிரைத் தருகிறேன்..
நீ எங்கு சென்றாலும் 
வாழ்க வாழ்க என 
என் இதயத்திலிருந்து வாழ்த்துகிறேன்....!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக