இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், அக்டோபர் 04, 2012

பெண்கள்....!

 இனி நான் எழுதும் பெண்களைப் பற்றிய  தகவல்கள்  கொஞ்சம்  கடுமையானவை. இவைகள் அனைத்தும்  நம் முன்னோர்கள் கூறியவைகள்  தான். இத்தகைய  குணங்களை உடைய சில பெண்களை  நான்  எனது வாழ்க்கையில்    பார்த்ததுண்டு.

 பெண்களைப் பற்றி இந்து மத ஆதாரங்களான வேத சாஸ்திரங்கள் புராண இதிகாசங்கள் ஆகியவைகளிலும், பண்டைய அரசு நீதியிலும் காணப்படுவதைத் தான் நான் இங்கு தொகுத்துக குறிப்பிட்டிருக்கிறேன். இவைகள் எனது  கூற்றுக்கள் அல்ல !இதைப்  படிக்கும் எந்தப் பெண்ணிற்கும் கோபம் வந்தால் நான் பொறுப்பல்ல....!.

1- ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது: (ரிக்வேதம் - 8-3-17) பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்கள். அவர்கள் நம்பத்தகாதவர்கள்
 
2- ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது: (ரிக்வேதம் - 10-95-10) பெண்கள் நட்பு நீடித்ததல்ல. அவர்கள் கழுதைப்புலியின் தன்மையுடையவர்கள்.
 
3- யக்ஞய வல்கியர் என்பவரால் வகுக்கப்பட்ட தர்ம நீதி:மூன்று பொருட்களை அதாவது செல்வத்தை, புஸ்தகங்களை, பெண்களை வேறொருவன் ஆதிக்கத்தில் விட்டு வைக்காதே.


4- மனு சொல்லுவதைக் கவனியுங்கள். இந்த உலகில் ஆண்கள் கற்பழிக்கும் இயல்பைப் பெண்கள் பெற்றிருப்பதனால் தான் புத்திசாலிகள் பெண்களுக்கு மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்களாகிறார்கள்.
 
5- மேற்படி: 2-24. இந்த விதத்தில் படித்த ஆண்களையும் பெண்கள் வசியப்படுத்தித் தப்பான வழியில் செலுத்தி இச்சைக்கும் போகத்திற்கும் அடிமையாக்கி விடுவார்கள்.
 
6- மனு பெண்களுக்குப் போகத்தில் ஆசை, நகையில் ஆசை, இருப்பில் ஆசை, என்பவைகளைக் கற்பித்ததோடு களங்கமுள்ள சிந்தையையும், சினத்தையும் , அயோக்கியத்தனத்தையும், வஞ்சகத்தையும், துர்நடத்தையும் பெண்களின் இலட்சணமாக வருணித்திருக்கிறார்
 பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை. 
 
7- எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லை. ஆறுகள் கொண்டு வரும் எந்த அளவிலும், நீரினாலும், கடலுக்கு ஆசை தீருவதில்லை. எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும் கொலைக்காரன் சமாதானம் அடைவதில்லை. இதுப்போலப் பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விட மாட்டார்கள்.
 
8-மகாபாரதம். நாசகாலன், ஊழிக்காற்று, பாதாளக் கடவுளாகிய எமன், இடைவிடாமல் நெருப்பைக் கக்குகின்ற அக்கினி, ஊற்றுவாய், சவரக்கத்தியின் கூர்மை, கொடிய விஷம், பாம்பு, நெருப்பு- ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால் எத்தனை கேட்டை விளைவிக்கக் கூடியதாமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள்.
 
9 - மகாபாரதம் அனுஷன் பர்வதம்: (39-8) பெண்ணின் அறிவு கண்டுபிடிக்க முடியாத ஆழமானது அல்லது தந்திரமுள்ளது.


10- பெண்ணை விடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகின்ற நெருப்புப் போன்றவள். பெண் மயக்கும் (வஞ்சகி) குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரே பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.

இன்னும் வரும்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக