சமீபத்தில் நான் படித்து ரசித்து சிரித்த சர்தார்ஜி ஜோக் ஒன்று...
ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் பயங்கர விபத்து.கிட்டத் தட்ட ஐம்பது சர்தார்ஜிக்களுக்கு மேல் ரயில் மோதி இறந்து விட்டனர். எல்லா மீடியாக்காரர்களும் ஸ்டேஷனில் குவிந்து விட்டனர்.
ஒரே ஒரு சர்தார்ஜி மட்டும் விபத்தில் இருந்து தப்பி பிளாட் பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அனைவருக்கும் மிகவும் ஆச்சரியம்.அவரிடம் விசாரித்தனர்.
"விபத்து எப்படி நடந்தது?"
"எல்லாம் ஸ்டேஷன் அறிவிப்பாளரால் வந்தது"
"அறிவிப்பாளரால் வந்ததா? எப்படி?"
"அவர் தான் train மூன்றாவது பிளாட் பாரத்தில் வருகிறது என்று கூறினார்"
"சரி அதற்கு?"
"உடனே பிளாட் பாரத்தில் இருந்தவர்கள் எல்லாம் பயந்து போய்
தண்டவாளத்தில் இறங்கி நின்றார்கள் அதனால் தான் train மோதி
அனைவரும் இறந்து விட்டார்கள்....!"
"ச்.... ச்... ச் ..... அது சரி நீங்கள் எப்படி தப்பித்தீர்கள்?"
"அடப் போங்க சார்,நான் தற்கொலை செய்து கொள்ள தண்ட வாளத்தில்
தலை வைத்துப் படுத்திருந்தேன். அறிவிப்பைக் கேட்டதும் மேலே ஏறி
பிளாட் பாரத்தில் படுத்துக் கொண்டேன்!"
நன்றி:அரசு பதில்கள் -குமுதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக