இந்த வலைப்பதிவில் தேடு

சனி, பிப்ரவரி 09, 2013

ஸ்ரீரங்கம் ஏ .எஸ் .முரளி !

                              

சனி நமது ஜாதகத்தில் எட்டாமிடத்தில் இருந்தால் அது அஷ்டமத்து சனியாம்...அது படாத பாடு படுத்துமாம்...எனக்கு இப்போது அஷ்டமத்தில் சனி .சரிதான் போலிருக்கிறது .மிகவும் சரியாகத்தான் நடக்கிறது.ப்ளொக்கரில் எழுதி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.எத்தனையோ எழுத திட்டமிட்டிருந்தேன்.முடியவில்லை.ஏனோ மனதில் ஒரு கவலை.இனம் புரியாத எண்ணங்கள்.அஷ்டமத்து சனியால் என்னவெல்லாம் ஆகும் என வலைப் பக்கங்களில் அலசினேன்.கிட்டத்தட்ட எல்லாம் சரியாகவே நடக்கிறது..!(ஆனால் சுக்கிரதசை அடிக்கும் என இருந்த காலங்களில் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை...!)

அது கிடக்கட்டும் ,இனிமேலாவது தொடர்ந்து எழுதலாம் என எண்ணுகிறேன்.ஒரு காலத்தில் தமிழில் வெளிவரும் முக்கியமான எல்லா பத்திரிகைகளிலும் ஸ்ரீரங்கம் ஏ .எஸ் .முரளி என்ற பெயரில் நிறைய எழுதி இருக்கிறேன்.எனவே அதே பெயரையே இப்போது ப்ளாக்கரிலும் வைத்து விட்டேன்.இனி பழைய உத்வேகத்துடன் நிறைய எழுதுவேன் என எண்ணுகிறேன்....

நான் ப்ளாக்கரில் எழுதாத இந்த ஒருமாத காலத்தில் தான் எனது ப்ளாக்கர் அதிகமாக படிக்கப் பட்டிருக்கிறது என்ற, எனக்குக் கிடைத்த புள்ளிவிவரமே நான் இவ்வாறு ஒரு சுய விளக்கம் தரக் காரணமாக இருந்தது. படிப்பவர்கள் உடனே இரண்டு வரிகளில் பின்னூட்டமும் தந்தால்தொடர்ந்து அதிகம்  எழுத உற்சாகம் கிடைக்கும்...

விரைவில் வருகிறேன்........!
 

2 கருத்துகள்:

Srividhya சொன்னது…

hey murali...innum niraya ezhudhu! :)

ஸ்ரீரங்கம் A.S.Murali சொன்னது…

நன்றி....விரைவில் வித்யாசமான படைப்புகளுடன் வருகிறேன்....

கருத்துரையிடுக