இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், மார்ச் 07, 2013

மனம் 12

மனதை நமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முதலில் 
நம்மை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் எண்ணங்களை விட்டு வெளியே முழுவதுமாக வரவேண்டும்.இதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளது.

ஒன்று அம்மாதிரி எண்ணங்களைக் கடந்து அவற்றில் நுழைந்து மனோ தைரியத்துடன் வெளி வருவது.

இரண்டாவது அந்த எண்ணங்களின் பக்கம் போகாமல் மனதினை வேறு பக்கம் செலுத்தி வேறு இடங்கள்,சூழ்நிலைகளுக்கு மாறி அதிலிருந்து மீண்டு வெளிவருவது.இதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப் படும்.ஏன் என்றால் நாம் எங்கே சென்றாலும் நாம் எண்ணங்கள் நம்முடனே தானே வரும்.? இதைத்தான் கவியரசர் "கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை"என்று எழுதினார் !

முதலாவது வழி ஓஷோ வின் கூற்றுப் படி எந்த நிகழ்வினையும் உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ள வேண்டும்.இன்பமா வரட்டும் .துன்பமா அதுவும் வந்து விட்டுப் போகட்டும்.எல்லாவற்றையும் கடந்து வருவோம்.வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டு விடுவோம்.என்கின்ற மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 
மனோதத்துவத்தில் ஒரு வழிமுறை கூறுவார்கள்.அதாவது போபியா என்ற எதைப் பார்த்தாலும் பயம் கொள்ளும் ஒருவகை மனவியல் சார்ந்த நோய்.தெனாலி  படத்தில் கமலுக்கு வந்த மனநோய் போல. இதிலிருந்து வெளிவர  உளவியல் வல்லுனர்கள் கூறும் ஒரு வழி,எதில் உங்களுக்கு பயம் வருகிறதோ அதை கொஞ்சம் கொஞ்சமாக  நாம் செய்து பார்த்து அதை மனதிற்கு பழக்கப் படுத்தி  விடுவது.அதாவது சிலபேருக்கு விமானம் பறப்பதைப்  பார்க்குக்கும் போது பயஉணர்ச்சி தோன்றும்.சிலருக்கு உயரமான இடத்திலிருந்து கீழே பார்க்கும் போது பயம் வரும். இவர்கள் விமானம் பறப்பதை கொஞ்சம் கொஞ்சமாக   பார்த்து பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.நாளடைவில் மனம் இதற்கு பழக்கப் பட்டு பயம் மறையும்.இது போலத்தான்  உயரமான இடத்திலிருந்து கீழே பார்க்கும் போது வரும் பயத்தினையும்  கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப் படுத்தி அதிலிருந்து வெளிவர முடியும்.
 
ஆக மனதிற்கு பிடிக்காத அல்லது மனம் வெறுக்கும்,பயம் கொள்ளும் எந்த 
நிகழ்வினையும்கொஞ்சம் கொஞ்சமாக பழக்கத்தின் மூலம் 
 கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரலாம். 
இன்னும் வரும்....  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக