இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், மார்ச் 14, 2013

பெற்றவர்கள் பட்டகடன் பிள்ளைகளை சேருமடி....


இது பிறந்து இரண்டு மாதமே ஆன நாய்க்குட்டி.மிகவும் நோஞ்சானாக உடல்முழுவதும் காயங்களுடன் தோல் உரிந்து மிகவும் பலவீனமாக 
இருந்தது.இன்று காலை  எனது site டிற்குள் நுழைந்த வுடன் இந்தக் 
குட்டி நாயைப் பார்த்து மிகவும் மூட் அவுட் ஆனேன். உடனே கடையிலிருந்து அதற்கு ரொட்டி வாங்கிப் போட்டேன்.பிறகு அங்கு வேலை பார்பவர்களிடம் இதைப் பற்றி விசாரித்தேன். இந்த நாய்க்குட்டி பிறந்து ஒரே மாதத்தில் இதன் தாய் ஒரு ரோடு விபத்தில் அடிபட்டு இறந்து விட்டது என்றும்  இறந்து போன தாயின் அருகே இரண்டு குட்டி நாய்கள் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்ததாகவும், பிறகு இரண்டு குட்டிகளையும் இங்கு எடுத்து வந்ததாகவும் கூறினார்கள்.

இதில் இன்னும் ஒரு சோகம் தாய் இறந்த ஏக்கத்தில்  இதன் சகோதர நாயும் உணவு ஏதும் உண்ணாமல் ஒரே வாரத்தில் இறந்து போய் விட்டதாகவும் கூறினார்கள்.
 
பிறவிப் பயன் பற்றியும் ,முன்ஜென்ம பாவம் பற்றியும்,பெற்றவர்கள் செய்த பாவங்கள் பிள்ளைகளைச் சேரும் என்பது பற்றியும் எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருந்த எனக்கு இந்த நாயின் பிறவியும் ,
நிலையும்  எதையோ உணர்த்துவது போல இருந்தது.பிறந்து இரண்டு மாதங்களே ஆன இந்த நாயின் இப்படிப்பட்ட நிலைக்கு என்ன காரணம் இருக்கமுடியும்.?அதற்கு பாவ புண்ணியங்கள் பற்றி என்ன தெரியும்? இந்த குட்டி நாய்க்கு ஏன் இந்த நிலை?மனது வலித்தது.
 
ஆனால் ஒரு ஆறுதல் எனக்கு முன்பே அதன் மீது கருணை  கொண்டு தினமும் பாலும் ரொட்டியும்கொடுத்து வளர்த்து வரும் அந்த தொழிலாளர்களை  நினைத்து பெருமைப் பட்டேன்.
இன்னும்  இறக்க குணம்உள்ளவர்களும் இருக்கிறார்களே என்று
சந்தோஷப் பட்டேன்.தன்னால் படைக்கப் பட்ட ஒவ்வொரு உயிருக்கும் ஆண்டவன் ஏதாவது ஒரு வழியில் படி அளப்பான் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
 
இன்று இந்த நாய்க் குட்டி எனக்கு நிறைய உண்மைகளை விளங்க வைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக