இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், பிப்ரவரி 21, 2017

ஷிரிடி ஒரு இனிய பயணம் - தரிசனம் 

நீண்ட நாட்களுக்கு -இல்லை, இல்லை நீண்ட வருடங்களுக்குப்பிறகு  எனது பிளாக்கில் எழுதுகிறேன்.
அது ஷிரிடி சாய் பாபாவின் அருளால் .


பல நாட்களாக ஒரு எண்ணம் ஷிரிடிக்குப் போய்  வர வேண்டும் என்று.அது அவ்வளவு சுலபம் அல்ல .எப்போது பாபா அழைக்கிறாரோ அப்போது தான் முடியும் என்பது வரலாறு.அப்படித்தான் எங்களுக்கும்.எனது நண்பன் அடிக்கடி ஷீரடி செல்லும் பாக்கேஜ் டூர் பற்றிய விவரங்களை பார்த்து பார்த்து சொல்வான்.ஒவ்வொரு முறையும் ஒருவர் செல்லலாம் என்பார் மற்றவர்களால் முடியாது.இவ்வாறு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தள்ளிப் போய் இப்போது தான் அது கனிந்தது.

பிரவரி 18 ஆம் நாளில் புறப்பட விமான சீட்டு எடுக்கப் பட்டது.18 மற்றும் 19 இரண்டு நாட்கள் ஷீரடி மற்றும் மும்பாய் பயணம் என திட்டம்.

எனது நண்பர்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து 17 ம் தேதி கிளம்ப நான் மட்டும் ஒரு வாரம் முன்பே சென்னை வந்து விட்டேன்.

18 ம் தேதி அன்று காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து 5 மணிக்கு நான் சென்னை விமான நிலையம் சென்றேன்.அங்கு எனக்கு முன்பே பல்லாவரம் வந்து தங்கி இருந்த நண்பர்கள் அங்கிருந்து விமான நிலையம் வந்து காத்திருந்தார்கள்.

5.35 க்கு விமானம் .நாங்கள் எண்கள் செக் இன்  பார்மாலிட்டிகளை முடித்து விட்டு விமானம் ஏறினோம்.விமானம் கிளம்பத்  தயாரானது.






ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம் ...என்ற நினைத்தாலே இனிக்கும் பாடல் எங்கோ ஒலித்தது....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக