இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், டிசம்பர் 12, 2011

மனம்....8 !

                                     நமது வாழ்க்கையில் நடை பெரும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நமது மனம் தானே தீர்மானிக்கிறது.?எப்பொழுதோ நடந்ததை அல்லது யாரோ சொன்னவற்றை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் தீர்மானிக்கப் படுகின்றன. அவை சரியாகவும்   போகலாம்.தவறாகவும் ஆகலாம்! இந்த விளாயாட்டு தான் வேண்டாம் என்கிறது ஜென். 

                                                     ஜென் மேலும் சொல்கிறது.நீங்கள் எதையும் தீர்மானிக்க வேண்டாம் நிகழ்வுகளை அதன் போக்கில் விட்டு விடுங்கள்.நடப்பவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.ஏனெனில் முன்பே தீர்மானிக்கப் பட்டு விட்டவைகளை உங்களால் மாற்ற முடியாது.

                                                     மனதினை லேசாக்கிக் கொள்ளுங்கள்.உங்களால் தீர்மாக்னிக்க முடியாது. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று தீர்மானம் செய்யாதீர்கள். ஆனால் நீங்கள் உங்களுக்கு பிடித்தவைகளுக்கு முன்னுரிமை தர முடியும்.  இது எனக்குப் பிடித்திருக்கிறது. இப்படி நடந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று  . இப்படி நினைக்கும் போது முடிவு எதிராக அமைந்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்.    
                                                     
                                    முன்னுரிமை தராமல் நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள்  என்றால்  முடிவு எதிராக அமையும் போது நீங்கள் மிகுந்த  ஏமாற்றம் அடைவீர்கள். அந்த ஏமாற்றம் உங்களை விரக்தி  அடையச் செய்யும். அதனால் கோபம் வரும்.கோபத்தின் விளைவுகள் விரும்பத்தகாதவையாக இருக்கும்!
                                   
                                    ஜென் துறவிகளைப் பற்றிக் கூறும் போது இப்படிச் சொல்வார்கள். அவர்கள் படுக்கையில் தான் உறங்குகிறார்கள். முட்களின் மீது படுப்பது இல்லை.ஆனால் படுக்கை கிடைக்காத போது அவர்கள் தரையில் படுத்து உறங்கவும் தயங்குவதில்லை.! 

                                                ஓஷோ அமரிக்காவில் இருந்த போது தினமும் விலைஉயர்ந்த  காரான ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் செல்வாராம்.ஆனால் அவர் நாடு கடத்தப் பட்டு இந்தியாவிற்கு வந்தபோது புனேயில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர்  வெளியில் செல்லும் போது நடந்தே  செல்வாராம். இதை கண்ட வெளிநாட்டு நண்பர் ஒருவர் நீங்கள் அமெரிக்காவில் இருந்த போது விலைஉயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில்தான் செல்வீர்கள்.இப்போது நடந்து செல்கிறீர்களே எப்படி உங்களால் முடிகிறது?என்று கேட்டாராம்.அதற்கு ஓஷோ,"அப்போது என்னிடம் கார் இருந்தது அதில் சென்றேன்.இப்போது கார் இல்லை.எனவே நடந்து செல்கிறேன்" என்றாராம்.  
  
                                                            இம்மாதிரியான பக்குவத்தைத் தான் நாம் பெற வேண்டும். இது இப்படி அமைந்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை என ஏற்றுக் கொள்ளும் வகையில் மனதினை இலகுவாக்கிக் கொள்ளுங்கள்.

                                           அப்போது மகிழ்ச்சி பொங்கும்...என்றும் தங்கும்....!

   இன்னும் அலசுவேன்......
                                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக