இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, டிசம்பர் 02, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை....7 !

  நான் ராகவேந்திரரை நினைத்து வேண்டிக்கொண்டே வந்தேன். இறங்கியதுமே ஸ்ரீ ராகவேந்திரரைக் கண்டதும் பரவசம் ஆனேன். அந்தக் கடையிலேயே டீ சாப்பிட்டுவிட்டு அந்த அரசாங்க அலுவலகத்திற்கு வழிகேட்டேன். வலதுபுறம் திரும்பினால் முதல் வீடு தான் அந்த அலுவலகம் என்று கூறினார்கள். தேட வேண்டிய வேலை இல்லாமல் சுலபமாக முடிந்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அந்த அலுவலகம் சென்று நான் வந்த காரணத்தைக் கூறினேன். எங்கள் நிறுவனத்தின் ஒப்பந்த  வேலைக்கான பணிகளை செய்யும் பிரிவு மேல் மாடியில் இருப்பதாகக் கூறினார்கள். நான் மேலே சென்று அந்த  வேலைக்கான பொறுப்பு வகிக்கும் பொறியாளரின் அறையின் முன் சென்று நின்றேன்.  அந்த அறையின் முன் வைக்கப்  பட்டிருந்த பெயர்ப் பலகையில்  அந்தப் பொறியாளரின் பெயர் எழுதப் பட்டிருந்தது...

 அவரின் பெயர்....ராகவன்.!..அப்போதே எனக்கு விளங்கிவிட்டது.இந்த ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடியும் என்பது. அதே போல அந்தப் பொறியாளர் எனக்கு சக துணை இல்லாத குறையைப் போக்கி கடைசி வரையில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து அந்த ப்ராஜெக்ட் ஐ  குறித்த  காலத்தில் முடிக்க மிகவும் உதவினார் .    

நான் வேலை செய்த அந்த நிறுவனம் குறித்த காலத்தில் வேலையை திறம்பட முடித்து நிலுவையில் ஒரு ருபாய் கூட இல்லாமல் முழு ஒப்பந்தத் தொகையையும் பெற்ற மிகச்சில வேலைகளுள் அதுவும் ஒன்றாக அமைந்தது!

இவ்வாறாக நான் ஒரே ஆளாக தனியாக நின்று அந்த ப்ராஜெக்ட் ஐ வெற்றிகரமாக முடித்தாலும் எனக்கு எனது தலைமை எந்தவிதமான பதவி உயர்வோ அல்லது சம்பள உயர்வோ தரவில்லை! அந்த நிறுவனத்தின் தலைமை காரியாலயம் மும்பையில் இருந்தாலும் இங்கே தலைமை ஏற்பவர் தான் இங்குள்ள சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை எடுப்பார். எனவே எனது பதவி உயர்வும் சம்பள உயர்வும் அவர்கைகளில் இருந்தும் ஏனோ எனக்கு எதுவும் அவர் செய்யவில்லை. ஆனால் எனக்கு பொள்ளாச்சியில் வேறு ப்ராஜெக்ட் தயாராக இருப்பதாகவும் ,கடைசி பில் ஐ முடித்து விட்டு அங்கு செல்ல  தயாராகும் படியும் எனக்கு தகவல் தரப் பட்டது.

இன்னும் வரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக