இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, அக்டோபர் 14, 2011

மனம் 3 ..!

இவ்வாறு மனதை காலிக் கோப்பையாக வைத்திருப்பது சுலபமானது அல்ல தான். ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கின்ற, கேட்கின்ற, பழகுகின்ற விதங்கள் நம்மை விடுவதில்லை.ஒவ்வொன்றும்  ஒவ்வொரு விதமாக நம்மை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.அவற்றிற்கு ஏற்றார்போல நாமும் நமது எண்ணங்களையும் செயல்களையும் மாற்றிக் கொண்டே இருக்கிறோம்.சுருக்கமாகச் சொன்னால் வெளி உலகம் நம்மை ஆட்சி செலுத்துகிறது.

துன்பமும் ,இன்பமும் நம் மனதில்  தான் இருக்கிறது என சில ஞானிகள் சொல்வதுண்டு. அது எப்போது உண்மை என பிறகு பார்க்கலாம்.ஆனால் பொதுவாகப் பார்த்தால் அப்படி இருக்க முடியாது தான்.ஏனென்றால் புற உலகின் ஆதிக்கம் நம்மை கட்டுப் படுத்து கிறது.அதனால் தான் இந்தப் புற உலகிலிருந்து தப்பிக்க  பல ஞானிகளும் முனிவர்களும் காடு மலைகளையோ, இமயமலைகளையோ நாடிச் சென்று தவம் இருந்தர்கள்!
முல்லா கதை ஒன்று உண்டு.முல்லா ஒரு நாள் தன் மனைவி ,கழுதை,மற்றும் தன் உடமைகளை ஒரு மூட்டையாக  எடுத்துக் கொண்டு வேறு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது வழியில் பார்த்தவர்கள் ,ஏனைய்யா,கழுதை தான் இருக்கிறதே மூட்டையை கழுதை மேல் வைத்துக் கொண்டு செல்லலாம் அல்லவா?நீ ஏன் சுமக்கிறாய் என்று சொல்ல ,முல்லாவும் மூட்டையை கழுதை மேல் வைத்துக் கொண்டு செல்கிறார்.இன்னும் சிறிது தூரம் சென்றதும் வேறு சிலர் முல்லாவிடம் ,ஏனய்யா கழுதை மேல் தான் இன்னும் இடம் இருக்கிறதே ஏன் உன் மனைவியை நடக்க வைக்கிறாய் ?அவளையும் கழுதை மேல் ஏற்றி விடய்யா என்று  கூற முல்லாவும் அவ்வாறே செய்கிறார்.இன்னும் சிறிது  தூரம் சென்றதும் வேறு சிலர் ஏனய்யா கழுதையை வைத்துக் கொண்டு நடந்து செல்கிறாய்?நீயும் கழுதை மேல் ஏறி உட்கார வேண்டியது தானே என்று கேட்க முல்லாவும் ஏறி உட்கார்ந்து கொள்கிறார்.இப்போது முல்லா ,அவர் மனைவி ,மூட்டை என அனைத்தையும் கழுதை சுமக்க இன்னும் சிறிது தூரம் செல்ல ,வேறு சிலர் முல்லாவிடம் ஏனய்யா இந்த நோஞ்சான் கழுதை மேலே இவ்வளவு சுமையை  ஏற்றிச் செல்கிறாயே என வினவ இப்போது மீண்டும் பழைய படி முல்லாவும் கீழே இறங்கி மூட்டை மற்றும் மனைவியுடன் நடந்தே செல்ல ஆரம்பித்தார்!  இன்னும் சிறிது தூரம் சென்றதும் வழியில் பார்த்தவர்கள் ஏனய்யா இந்த நோஞ்சான் கழுதை யை இப்படி இவ்வளவு தூரம் நடத்தியே கூட்டி வருகிறாயே இது பாவம் இல்லையா?என்று கேட்க கடைசியில் முல்லாவும் அவர் மனைவியும்  சேர்ந்து ஒரு மூங்கிலில் அந்தக் கழுதையைக் கட்டித் தொங்கவிட்டு இருவரும் சேர்ந்து அதை தூக்கிக் கொண்டு செல்கிறார் கள்! இப்படிப் போகிறது அந்தக் கதை.
வெளி உலகம் சொல்வதெற்கெல்லாம் செவிசாய்த்தால் முடிவு இப்படித்தான் போகும் என்பதற்காகத் தான் இந்தக் கதை.  

 அப்படி யானால் புற உலகை சார்ந்து,மற்றவர்கள் கூறுவதை நாம் ஏற்றுக் கொண்டு வாழக் கூடாதா?என்றால் ,நமக்கு அமைதியும்,நிம்மதியும்,சந்தோஷமும் வேண்டும் என்றால் கண்டிப்பாக செவி சாய்க்கக்  கூடாது...ஒரு சில விதி விலக்குகளைத் தவிர.....!      

 இன்னும் அலசுவேன்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக