இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், டிசம்பர் 05, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.....8 !

எனது அனுபவங்களைத் தொடரும் முன் கொஞ்சம் பிறர் அனுபவங்கள்....

""எனது கனவில் கடவுள் வருகிறார். சில சமயங்களில் அவர் என்னோடு பேசுகிற மாதிரி இருக்கிறது. இதெல்லாம் சாத்தியமா?'' -இப்படியொரு கேள்வியை ஆன்மிகப் பெரியவர் ஒருவரிடம் ஒரு பக்தர் கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர், ""கடவுள் கனவில் எல்லாம் வரமாட்டார். உங்களோடு பேசுகிறார் என்பது வெறும் மனப்பிரமை. இப்படி எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு திரியாதீர்கள். பிறகு உங்களை மனநோயாளி என்று சொல்லி, ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவார்கள்'' என்று பதிலளித்தார். அவருடைய பதில் எனக்கு வருத்தத்தை அளித்தது. ஏனெனில், வேத- சாஸ்திரங்கள், புராண- இதிகாசங்கள், தர்ம சாஸ்திரம், நீதி சாஸ்திரம் அனைத்தையும் அறிந்தவர் அவர்.

"உங்கள் ஊருக்கு வெளியிலிருக்கும் அரச மரத்தின்கீழ் நான் இருக்கிறேன். என்னை வெளியே எடுத்துக் கோவில் கட்டு' என்று சாதாரண மனிதனின் கனவில் இறைவன் சொல்ல, அப்படியே ஒரு முருகன் சிலையோ, காளி சிலையோ, சிவலிங்கமோ கிடைக்க, அதைப் பிரதிஷ்டை செய்து பல சக்தி வாய்ந்த கோவில்கள் பல ஊர்களில் பல நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டிருக்கும் போது, கடவுள் கனவில் வரமாட்டார் என்று சொல்லுவதில் என்ன நியாயம் இருக்கிறது? இறைவன் திருவருளின்றி எதுவுமே நடப்பதில்லை. இது யுகயுகாந்தர மாய் நடந்து வரும் ஒரு விளையாட்டு.


 
அருண் என்று ஒரு பக்தர். இவர் சென்னையை அடுத்த வேளச்சேரியில் வசிக்கிறார். இவர் மந்திராலயம் ஸ்ரீ ராக வேந்திர சுவாமிகளின் தீவிர பக்தர். நேரமும் விடுமுறையும் கிடைக்கும்போதெல்லாம் மந்திராலயம் சென்றுவிடுவார். தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக இருக்கும் இவரது கனவில் சுவாமிகள் தோன்றி, தனக்கு ஒரு பிருந்தாவனம் கட்டுமாறு பணித்தார். கனவிலிருந்து விழித்த அருண் திடுக்கிட்டார். சுவாமிகளே நேரில் வந்து சொன்னது மாதிரி இருந்தது அந்தக் கனவு. கனவை நம்பாமலும் இருக்க முடியவில்லை. மிக மிக எளியோனா கிய என்னால் அந்த மகானுக்கு கோவில் கட்ட முடியுமா என்று திகைத்தார். தன் வீட்டி லுள்ளவர்களிடமும் நண்பர்களி டமும் கனவைப் பற்றிச் சொன்னார். பின்னர் அவரே ஒரு முடிவெடுத்தார்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேனுபுரீஸ்வரர் என்கிற சிவாலயமும், அதையொட்டி சித்தர்கள் கோவிலும் இருக்கும் ஊர் சித்தர்பாக்கம். இப்போது அதை சித்தாலப்பாக்கம் என்றழைக்கிறார்கள். வேளச்சேரியிலிருந்து மேடவாக் கம் சென்று, அங்கிருந்து மாம்பாக்கம் சாலை வழியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றால் பழம் பெரும் கிராமமான சித்தர்பாக்கம் எனும் சித்தாலப்பாக்கத்தை அடையலாம். அந்த சித்தாலப்பாக்கத்தில் சிறிதளவு நிலம் வாங்கி, தன் நண்பர்களுடனும் பக்தர்களுடனும் கோவில் பணிகளைத் தொடங்கி விட்டார் அருண். அவரே எதிர்பாராத விதமாகப் பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் நிதி கொடுக்க, பிருந்தாவன வேலைகள் அனைவரும் வியக்கும்படி விரைவாக நடைபெற ஆரம்பித்தது.

மந்திராலயத்திலுள்ள மூல பிருந்தாவனத்திலிருந்து மிருத்திகை (மண்) எடுத்து வந்து, அதற்கு 48 நாட்கள் சிறப்புப் பூஜை செய்து, 24-1-2007 அன்று சித்தாலப் பாக்கத்தில் பிருந்தாவனப் பிரதிஷ்டை வெகு விமரிசையாக நடந்தேறியது. அப்போது கோவில் கோபுர கலசத்தை கருடன் ஒன்று மூன்று முறை வட்டமிட்டுப் பறந்ததை அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மெய்சிலிர்த்தனர். "ஓம் நமோ நாராயணா, ஓம் ஸ்ரீ ராகவேந்திரா' என்று விண்ணதிர முழங்கினர். எல்லா நலன்களையும் ஸ்ரீ ராகவேந்திரர் அனைவருக்கும் காமதேனுவாக இருந்து வழங்குவார் என்பதற்காக இதனை "நல பிருந்தாவனம்' என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

பிருந்தாவனத்தையொட்டி ஸ்ரீ ராகவேந்திரர் ஏழடி உயரத்தில் பவ்ய ஸ்வரூபமாகக் காட்சியளிக்கிறார். சிரசில் பிரஹலாதராக இருந்து வணங்கிய ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும், மார்பில் ஸ்ரீ ராமரையும் தாங்கி கண்கொள்ளா அழகுடன் காட்சியளிக்கிறார் மகான் ராகவேந்திரர். உடுப்பி பாலிமார் மட சுவாமிகள்

ஸ்ரீ விஞ்ஞானிதி தீர்த்தர் இந்தக் கோவிலுக்கு விஜயம் செய்து பூஜைகளை நடத்தி, சித்தாலப்பாக்கத்தை விட்டுப் பிரியவே மனமில்லை என்று வர்ணித்திருக் கிறார். திருவுருவச் சிலையை 48 நாட்கள் ஜலதான்ய வாசம் செய்கையில், ஆறாவது நாளிலிருந்து ஒரு சர்ப்பம் சிலையின்மீது இரவு முழுவதும் இருந்து, பொழுது புலர்ந்ததும் சென்று விடுவது வழக்கமாக இருந்தது என்றும்; 48-ஆவது நாளன்று காணாமல் போன ஆஞ்சனேயர் சிலையைத் தன் உடலில் சுற்றிக் கொண்டு மேலே வந்து அந்த சர்ப்பமே கொடுத்தது என்றும் சொல்லப்படுகிறது.

மந்திராலயத்தில் உள்ளதுபோல் மாஞ்சாலி அம்மனுக்கும் சிலை வைத்து பூஜை நடைபெறுகிறது. ஸ்ரீ ராகவேந்திரர் சில ஆண்டுகள் மதுரையில் இருந்து கல்வி கற்றார். பின்னர் கும்பகோணம் புறப்படும்போது மதுரை மீனாட் சியை விட்டுப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். அப்போது மீனாட்சியம்மனே அவரிடம், "நீ இருக்கும் இடத்திலெல்லாம் நான் இருப்பேன்' என்று சொன்னதால், மாஞ்சாலியம்மனே மீனாட்சி என்று ஓர் ஐதீகமும் உண்டு. அதனால் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கு மடமோ, கோவிலோ அமைக்கும்போது எல்லா ஊர்களிலும்

ஸ்ரீ மீனாட்சியம்மனின் சொரூபமாக மாஞ்சாலியம்மனையும் பிரதிஷ்டை செய்வது வழக்கம். அது சித்தாலப்பாக்கத்தி லும் நடைபெற்றுள்ளது.

2007-ஆம் ஆண்டுவரை வெறும் பொட்டல் காடாகக் காட்சியளித்த சித்தா லப்பாக்கத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் அமைந்த பிறகு எங்கெங்கு காணினும் சிறிய, பெரிய குடியிருப்புகள், அடுக்கு மாடி வீடுகள்! இரண்டு மூன்று வருடங்களில் ஸ்ரீ சுவாமிகள் தன்னருகே அனைவரையும் அழைத்துக் கொண்டு விட்டார் போலும்!

2007-ஆம் ஆண்டு கும்பாபிஷேகத் திற்கும், பிருந்தாவனப் பிரதிஷ்டைக்கும் நாள் குறித்துவிட்ட நிலையில், நிதி நெருக் கடி ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் மீண்டும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஆதம்பாக்கத்தில் மாதவாச்சார் என்னும் அன்பர் மந்திராலய உண்டியில் போடுவதற்காக பத்தாயிரம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தார். ஆனால் உடனடியாக அவரால் மந்திராலயம் செல்ல முடியவில்லை. ஸ்ரீ ராகவேந்திரர் அவர் கனவில் தோன்றி, "நீ மந்திராலயம் வரவேண்டாம். இங்கேயே சித்தாலப்பாக்கத்திற்கு நான் வந்திருக்கிறேன். அதனால் பத்தாயிரம் ரூபாயை அந்தக் கோவிலுக்கு நீ நன்கொடையாக வழங்கு' என்று சொல்ல, மகிழ்ந்து போன மாதவாச்சார் சித்தாலப்பாக்கம் எங்கிருக்கிறது என்று தேடி வந்து, பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாராம்.

ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் சித்தாலப் பாக்கம் வந்து தியானம் செய்வதுண்டு. ஒரு நாள் அவர் தியானம் செய்து கொண்டிருக்கும்போது, அருகிலிருந்த ஏரியில் ஸ்ரீ சுவாமிகள் ஸ்நானம் செய்துவிட்டு பிருந்தாவனத்துள் நுழைந்ததைப் பார்த்து அதிசயப்பட்டாராம். அனைவரிடமும் ஸ்ரீ ராயரின் அருள் தனக்குக் கிடைத்துவிட்ட தாகச் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.

அதேபோல சென்னை துறைமுகப் பொறுப் புக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ரமணன் என்பவர் சிறந்த ராகவேந்திர பக்தர். பல ஆண்டுகளாக வியாழக் கிழமைகளில் உணவு ஏதும் அருந்தாமல் ஸ்ரீ ராகவேந்திரரே கதி என்று கிடப்பவர். தாம்பரத்தில் வசிக்கும் இவர் ஒவ்வொரு வியாழனன்றும் திருவல்லிக் கேணி, மாம்பலம் என்று ஏதாவது ஓரிடத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ ராயரை நேரில் சென்று தரிசிப்பது வழக்கம். திடீரென்று அவருக்கு இதய நோய் வந்து அவதிப்பட்டார். அந்த வார வியாழக் கிழமையில் தான் வசிக்கும் தாம்பரத்திற்கு அருகில் ஏதும் கோவிலோ மடமோ இல்லையே என்று வருந்தினார். புதனன்று இரவில் ஸ்ரீ ராயர் அவர் கனவில் தோன்றி, சித்தாலப்பாக்கத்தில் தன்னைக் காண வருமாறு அழைத்தாராம். அப்படிப்பட்ட மகான்தான் ஸ்ரீ ராகவேந்திரர்.

2007-ஆம் ஆண்டு கட்டப்பட்ட சித்தாலப் பாக்கம் ஸ்ரீ ராகவேந்திரர்  கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய ஆராதனை வெகு சிறப்பாக நடைபெறுவதோடு, ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானமும் தன் நண்பர்களின் துணையோடு செய்து வருகிறார் அருண். அதுவும் ஐந்து நாட்கள். அந்த ஐந்து நாட்களிலும் இசைக் கச்சேரிகள், சொற்பொழிவுகள் என்று கோலாகலம். 2008-ஆம் ஆண்டு

ஸ்ரீ ராகவேந்திர சரித்திரமும், 2009-ஆம் ஆண்டு சுந்தர காண்டமும் சொல்லும் வாய்ப்பினையும் புண்ணியத்தையும் எனக்களித்தார் அருண்.

பக்தர்கள் இவ்வாலயம் சென்று ராகவேந்தி ரரின் அருளைப் பெற்றிடுங்கள்.


                                                                                             --  பா.சி. ராமச்சந்திரன்


Name : Santha Kumari Sitharthan Date & Time : 1/5/2011 1:30:34 PM
-----------------------------------------------------------------------------------------------------
நீங்கள் அனுப்பிய இந்த செய்தி மிகவும் அருமை மெய் சிலிர்த்தது ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு ஜெய். ப்ளீஸ் சிதலபக்கம் முகவரி & லன்மார்க் கூறவும். நங்கள் 1 முறையாவது சுவாமி தரிசனம் பெற வேண்டும் .எங்களது குறைகளை அவரிடம் கூறி ஆசி பெற வேண்டும்.மிக்க நன்றி .
-----------------------------------------------------------------------------------------------------
Name : gururajan, chengalpet Date & Time : 9/6/2010 9:47:18 AM
-----------------------------------------------------------------------------------------------------
vanakam
-----------------------------------------------------------------------------------------------------
Name : நாகராஜன் பாப்பாரப்பட்டி Date & Time : 8/4/2010 5:23:23 PM
-----------------------------------------------------------------------------------------------------
வணக்கம் அடியேன் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சார்ந்தவன்.1935ம் ஆண்டு ராயரின் ப்ருந்தாவன ப்ரதிஷ்டை இவ்வூரில் நடைபெற்றது.அப்போதைய மிட்டாதார் திரு அச்சுத அய்யரின் தம்பி கிருஸ்ணமூர்த்தி ராவ் அவர்கள் தனக்கு ஆண் வாரிசு வேண்டி மந்திராலயத்தில் சேவை புரிந்தபோது "உங்கள் ஊருக்கு நானே வருகிறேன் என்று கனவில் சொன்னதாக உண்மை வரலாறு உள்ளது. மகானின் அருளால் ஆண் குழந்தை பிறந்து கே.குருராவ் என்ற பெயரில் இன்றும் அவர் இங்கு வாழ்ந்து வருகிறார் ராயரின் அருள் பெற்றிட அனைவரையும் பாப்பாரப்பட்டிக்கு வரவேற்கிறேன்
-----------------------------------------------------------------------------------------------------
Name : k.k.gopalswamy Date & Time : 7/25/2010 10:44:24 AM
-----------------------------------------------------------------------------------------------------
என் கனவில் வியாசர் வந்து நல் ஆசி அருளினார், அன்றிலிருந்து நான் வியாசர் பக்தன் ஆகி நாளை (ஜூலை இருபத்தைந்து ) அவருடைய ஜெயந்தி -ஐ ஒரு ஆஸ்ரமத்தில் கொண்டாடபோகிறேன். நான் அவருக்காக ஒரு தியானமண்டபம் கட்டுவதற்கு முழு முயற்சி எடுத்துள்ளேன்.இதைப் பற்றி வுங்கள் மேலான ஆலோசனை தேவை, நன்றி
-----------------------------------------------------------------------------------------------------
Name : Saravanaraju Date & Time : 7/19/2010 1:58:19 PM
-----------------------------------------------------------------------------------------------------
உண்மை, கடவுள் என் கனவில் வந்திருக்கிறார். என் இரண்டவது பையன் பிறந்தது தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி முதுமாலயம்மன் என் கனவில் வந்து உனக்கு இரண்டவது பையன் என்று சொன்னது. சொன்னபடியே எனக்கு இரண்டவது பையன்தான்.
-----------------------------------------------------------------------------------------------------
 ஆதாரம்  : www . nakkheeran .in  01 .07 .10 

 அற்புதங்கள்    தொடரும்.....

2 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

நல்ல பதிவு

ஸ்ரீரங்கம் A.S.Murali சொன்னது…

நன்றி திரு ராஜா!

கருத்துரையிடுக