இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், செப்டம்பர் 15, 2011

ஸ்ரீரங்கம்-- 2 .ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை ...1

     ஏன் ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை 1 என தலைப்பு? ragavmurali பக்கத்தினை முதலில் படித்து முடித்துவிட்டு கீழே தொடரவும்.

 ஸ்ரீரங்கத்தில் ராகவேந்திர புரத்தில் இருக்கிறது ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனம் .நான் 80 களில் அங்கு செல்ல ஆரம்பித்தேன்.அப்போதெல்லாம் அந்த ஏரியா  ஸ்ரீரங்கத் துடனே சேர்த்தி கிடையாது.ஸ்ரீ ராகவேந்திரர்-- மந்த்ராலயத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்த நாளினை ஒவொவொரு வருடமும் ஆராதனை விழாவாகக் கொண்டாடுவார்கள்.அன்று பக்தர்கள் அனைவருக்கும் உணவு தருவார்கள்.அதற்கு நானும் செல்வேன். அப்படித்தான் நான் ராகவேந்திரர் ஆலயம் செல்ல ஆரம்பித்தேன்.ஆலயத்தைச் சுற்றிலும் முள் வேலி போடப்டப்பட்டிருக்கும். (இப்போது நல்ல சுற்றுச்சுவர் இருக்கிறது) கோவிலின் உட்புறம் கடைசியில் மலட்டு ஆறு ஓடும்.அதில் நான் குளித்திருக்கிறேன்.அதற்கு திருமஞ்சனக் காவேரி என்ற பெயரும் உண்டு.அதிலிருந்து தான் ஒரு காலத்தில் ஸ்ரீ ரங்ககனாதருக்கு திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு செலவார்களாம்.அதனால் தான் அந்தப் பெயர் என கேள்விப் பட்டிருக்கிறேன்.இப்போதைய மக்கள் பெருக்கத்தினால் அந்த ஆறு கெட்டுபோய் விட்டது.
இப்போது வரையிலும் நான் அந்த பிருந்தாவனத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்.ரஜினிகாந்த் கூட இங்கு வருவதுண்டு.இப்படியாக ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தனானேன்.
                                       நான் B .E .படித்து என்ஜினீயர் ஆகவேண்டுமென்பது என் தந்தை யின் ஆசை.(அன்றைய காலகட்டத்தில் ஸ்ரீரங்கத்தின் புகழ் பெற்ற சமையற்கலைஞர் மணி அய்யர் தான் எனது தந்தை )நானும் அவரின்  ஆசையை நிறைவேற்ற திருச்சி R .E .C .மாலைக் கல்லூரியில் விண்ணப்பித்து entrance exam எழுதிக் காத்திருந்தேன்.தேர்வு முடிவுகள் வெளிவந்து BE சேர்க்கைக்கு தேர்வானவர்கள் பட்டிலைப் பார்த்தேன் .என் பெயர் இல்லை.!
பெரும் ஏமாற்றத்துடன் கண்களில் நீர் முட்டியது.என்னை விட சுமாராக படிக்கும் என் நண்பர்களுக்கெல்லாம் சீட் கிடைத்தது.எனக்கு கிடைக்கவில்லை.இரண்டொரு நாட்களில் அவர்கள் எல்லோரும் சேர்ந்துவிட்டார்கள்.காலேஜ் திறக்க நாளும் குறித்தாகிவிட்டது. என் தந்தை இறந்த அந்த ஆண்டிலேயே காலேஜ்- ல் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.நாட்கள் செலச்செல்ல எனது துக்கம் பெருகியது.ஸ்ரீ ராகவேந்திரரிடம் சென்று மனமுருக வேண்டலானேன்..
                                    அன்று ஒரு வியாழக்கிழமை  காலை  வேளை,   ஸ்ரீராகவேந்திரர் கோவில் சென்றுவிட்டு வீடு வந்தேன். தபால்காரர் என் கையில்  ஒரு கடிதத்தை தந்தார்.அவர் பெயர் ராய(ர்) அப்பன்.......!

அற்புதங்கள் தொடரும்......
             


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக