இந்த வலைப்பதிவில் தேடு

புதன், செப்டம்பர் 21, 2011

கிடைக்காததும் கிடைக்கும்...!

நான் எழுதுகின்ற ஆன்மீக நம்பிக்கைகள் சிலருக்கு இப்படியெல்லாம் நடந்திருக்குமா?எல்லாம் கட்டுக் கதை என்று தோன்றும்.இது நாத்திகம் பேசுபவர்கள் போல. 
சிலருக்கு சாதாரணமாக நடந்ததை கடவுளின் மேல் ஏற்றிகூறுவதாகத் தோன்றும்.இது கடவுளை மேம்போக்காக வேண்டுபவர்கள் கட்சி. 

வேறு சிலரோ நமக்கும் இது போல அதிசயங்களை செய்ய மாட்டாரா நாம் வணங்கும் கடவுள்? எனத் தோன்றும்.இவர்கள் கடவுளை  நம்பிக்கையுடன் வணங்குபவர்கள். 
நானும்  கிட்டத்தட்ட இந்த மூன்று நிலைகளிலும் இருந்திருக்கிறேன்!
முத்து படத்தில் ரஜினியின் ஒரு வசனம்.
"கிடைக்கிறது கிடைககாம இருக்காது.கிடைக்காமல் இருப்பது  கிடைக்காது!.--
நாம் "இனி கிடைக்காது.இனி எதுவும் நடக்காது "என முடிவு  செய்கிறோமே அதைக்  கிடைக்க வைப்பதுதான் அந்தக் கடவுள்!
மனிதனை நோய்களிலிருந்து,மரணத்திலிருந்து காப்பாற்றும் கடைசி அறிவியல் பூர்வமான எல்லை டாக்டர்கள் தான்.ஆனால் அந்த டாக்டர்களும் ஆச்சர்யப் படும் அளவிற்கு  ,மனப்பூர்வமான ஆழ்ந்த பிரார்த்தனைகளுக்குப் பிறகு ஒருவர் மீண்டு வந்தால் அதுதான் கடவுளின் கருணை.(எம் .ஜி.ஆர், சமீபத்தில் ரஜினி- நமக்குத் தெரிந்த உதாரணம்)இது- நோய் மரணத்திற்கு மட்டுமல்ல ,நம்மை விட்டுக் கை மீறிப் போகும் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்து அதன் மூலம் நடக்காது என மற்றவர்களால் பார்க்கப் பட்ட விஷயம் நடந்துவிட்டால் ,கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவித்துப் பார்த்தவர்களால் மட்டுமே உணர முடியும்!
இதை பல முறை ஸ்ரீ ராகவேந்திரரின் கருணையினால் நான் அனுபவித்திருக்கிறேன்.  இதே போல ராகவா லாரன்ஸ்(முனி -பார்ட் 2  காஞ்சனா- லாரன்ஸ் தான்) கூட கூறியிருக்கிறார்!.....அது என்ன?அதைப் பிறகு பார்க்கலாம்.


மீண்டும் வருவேன்......                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக