இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

ஸ்ரீரங்கம்!

எல்லோருக்கும் தன பிறந்த ஊர் ரொம்பவும் பிடிக்கும் தான்.ஆனால் ஸ்ரீரங்கம் போல வருமா?என் கூடப் படித்தவர்கள் சிலபேர் இன்னும் ஸ்ரீரங்கத்திலேயே இருந்து வருகிறார்கள்.நான் அவர்களைப் பார்த்து ரொம்பவும் பொறாமை படுவேன்.எங்கெங்கோ சுற்றி  வந்து விட்டேன்.இப்போது ஸ்ரீரங்கத்திலேயே மீண்டும் இந்த முரளி! ஆச்சரயம் தான். எல்லாம் ஸ்ரீ ராகவேந்திரர் அருள்.

 நான் எந்த ஊரில் வேலைப் பார்த்தாலும் ஞாயிறுகளில் ஸ்ரீரங்கம் வந்து விடுவேன். அப்போது எல்லாம் ஸ்ரீரங்கம் -சுஜாதா, ஸ்ரீரங்கத்து தேவதைகளில் எழுதியது போல அடையவளஞ்சான் வரைக்கும் தான்.இப்போதோ பரந்து விரிந்து விட்டது.காவேரிக்கரை ,கொள்ளிடக்க்கரை வரையிலும் மேற்கே கிட்டத்தட்ட மேலூர் வரையிலும் சென்று விட்டது! ஒரு அடிகூட நிலம் இல்லாமல் எல்லாம் அடுக்குமாடி வீடுகளாக ஆகிவிட்டது. ஸ்ரீரங்கத்தைப் பற்றி என்ன செய்தி வந்தாலும் அதைப் படித்துவிடுவேன்.கூகுள் ப்லோக்கேரில் கூட நிறைய படித்திருக்கிறேன்.அதில் ஒரு சுவாரஸ்யம் -v .s .மஹால் பற்றி ஒரு பக்கம் படித்தேன்.அதை வடிவமைத்துக் கட்டியது நானும் எனது நண்பன் திரு.ராஜசேகரனும் தான்!ஸ்ரீரங்கத்திலேயே மிகச்சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக மிகுந்த சிரத்தையோடு செய்தோம்.அதற்கு V .S .மஹால் பக்கத்தை வடிவமைத்த திருமதி  ப்ரீத்தி(பத்மினி ) ,அவர் சகோதரி திருமதி sriththi பரத் ஆகியோரும் அவரகளது தாயாரும் முக்கிய காரணமாக இருந்தார்கள்.இன்று அது ஸ்ரீரங்கத்தில் ஒரு சிறந்த திருமண மஹாலாக இருக்கிறது.அதன் திறப்பு விழாவின் போது பல முக்கிய புள்ளிகளும் வந்திருந்தார்கள்.அப்போது மேடையில் பேசிய நான் திருமதி ப்ரீத்தி அவர்களின் பெயரைக் கூற மறந்து விட்டேன்.அதனால் அவருக்கு என் மீது வருத்தம் கூட ஏற்ப்பட்டது.அதை இந்த வலை மூலம் போக்கிவிட்டேன் என நம்புகிறேன்.அன்று ஒரு ஆயிரம் பேர்களின் முன் அவர் பெயரைக் கூற மறந்த நான் இன்று  உலகம் முழுவதும் பார்க்கும் வண்ணம் எழுதி விட்டேன்!

பின்னர் தொடருகிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக