இந்த வலைப்பதிவில் தேடு

சனி, செப்டம்பர் 24, 2011

சிக்கு புக்கு !

"சிக்கு புக்கு"என்றொரு தமிழ் படம் பார்த்தேன்.என்ன ஒரு அருமையான நளினமான கதை. ஏனோ தானோ என- அதிக ஆர்வக்கோளாறு காரணமாக எடுத்துவிட் டார்கள் போல! எடிடிங் ,இசை, பாடல்கள், திரைக்கதை என அனைத்திலும் கோட்டை விட்டு விட்டார்கள்.ஏன் தலைப்பிலேயே கூட கோட்டை விட்டு விட்டார்கள்!

மெல்லிய நீரோடை போன்ற கதைக்கு" சிக்கு புக்கு"  என டைட்டில்.என்ன ரசனையோ?.டைட்டில் ஐப் பார்த்தாலே யாரும் உள்ளே போகப் பயப்படுவாகளே ஐயா!  

ஆர்யா ,ஸ்ரேயா இருவரின் நடிப்பும் வீணாகி விட்டது.காதலுக்கு மரியாதை,மௌன ராகம் போல க்ளைமாக்ஸ் இல் உருக்கி எடுத்திருக்க வேண்டாமா?
அப்பா ,மகன் இரண்டு ஆர்யாவையும் மிகச்சரியாக் திரைகதையில் காட்டி பார்ப்பவர்களை கலங்கடித்த்ருக்க வேண்டாமா?

ஒரே ஆறுதல் ஒளிப்பதிவு மட்டும் தான்.

வாரணம் ஆயிரம் படத்திற்கு நிகரான அற்புதமான கதை. கோட்டை விட்டு விட்டீர்களே புண்ணிய வான்களே.

ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்திருக்க வேண்டாமா? வெற்றிப் படம் தந்திருக்கக் கூடிய நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விட்டீர்களே. (ஏதோ ஆங்கிலப் படத்தின் தழுவலாமே?)

அடுத்த முறை நல்ல கதை கிடைத்தால் discussion க்கு என்னையும் கூப்பிடுங்கள்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக