இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை...3

என்னைத்  தனியாக நிற்கச் சொன்னதும்  ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்த அனைவரும் பேச்சை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தனர். எனக்கு என்னவோ போலிருந்தது.ஒரு ஓரமாகப் போய் நின்றேன்.புதியவர்களின் admission முடியப் போகும் நேரம்,கல்லூரியின் முதல்வர் உள்ளே வந்தார்.!
    
ஓரமாக தனியே நின்ற என்னைப் பார்த்த அவர், நீதான் முரளியா? என்றார்.முன் பின் தெரியாத என்னை அவர் சரியாகப் பெயர் சொல்லிக் கூப்பிட, எனக்கு மட்டும் அல்லாமல் அங்கிருந்த அனைவருக்கும், வியப்பும் ஆச்சர்யமும் உண்டானது.   நான் ஆம் என்று சொல்ல ,admission செய்துகொண்டிருந்தவர்களைப்  பார்த்து இந்தப் பையனுக்கு admission போட்டு விடுங்கள் என்றார்!  


அவர்கள் ,என் பெயர் பட்டியலில் இல்லாததைக் கூற  ,"ஆமாம், முரளியின் பெயர் இருக்காது." எனக் கூறி விட்டு மேலும் தொடர்ந்தார்."முரளி யின் பெயர் மெரிட் லிஸ்டிலேயே வந்திருக்க வேண்டும். ஒரு நாள் என்னவோ  திடீரென்று எனக்கு  admission னுக்கு தேர் வானவர்கள் பட்டியலையும் அவர்களின் தேர்வு மதிப்பெண்களையும் சரி பார்க்கத் தோன்றியது.அப்போது தான்  இந்த முரளி யின் பெயர் விடுபட்டுப் போனது தெரியவந்தது.ஆர்வமுடன் நுழைவுத் தேர்வு எழுதி பாஸான முரளிக்கு admission போடாதது உறுத்தலாக இருந்தது.அதனால் கடைசியாக கல்லூரிக் கோட்டாவில்  சேரவேண்டிய ஒரு அரசியல் புள்ளியின் சிபாரிசோடு வந்த மாணவன்  சேராததால் அந்த இடத்திற்கு முரளியைப் போடச்சொல்லிவிட்டேன். அதனால் தான்  பட்டியலில் முரளியின் பெயர் இல்லை" என்றார்.   
     
வழக்கமாக அவ்வளவு தீவிரமாக தேர்வானவர்களின் பட்டியலை யாரும் பார்க்க மாட்டார்கள்.அப்படியே பார்த்தாலும் மெரிட் லிஸ்ட் இன் மார்க்கினை வைத்து சரி பார்க்க மாட்டார்கள்.அப்படியே பார்த்தாலும் admission ஓடிக்கொண்டிருக்கிறது  இனி என்ன செய்ய?என விட்டு  விடுவார்கள்.இவைகளை எல்லாம் மீறி அவருக்கு ஏனோ ஒரு உறுத்தல் ஏற்பட்டு எனக்கும் எப்படியாவது சீட் தந்துவிட வேண்டும் என்று தோன்றி இருக்கிறது! இவையெல்லாம் எப்படி நடந்தது.....??

உங்களின் தீர்மானத்திற்கே  விட்டு விடுகிறேன்.

 ஆனால் ,அந்த ஒரே நாளில் என்னுடன் கல்லூரியில் சேர்ந்த எல்லாப் பிரிவு மாணவர்களுக்கும்-- ஏன், கல்லூரியின் முதல்வருக்கும் கூட இந்த முரளி பரிச்சயமானேன்!  பின்னாட்களில் ஒரு சிலர் என்னை "கோட்டா சீட் முரளி"-என்று கூடச்  செல்லமாகக்  கூப்பிடுவதுண்டு!     

     மீண்டும் வருவேன்..........






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக